முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கூட உயர்கல்வி பெறும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இவை ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தை அழிக்கிறது.
இந்தியாவில் பெரும்பாலான கிராம்பபுறங்களில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பது வாடிக்கையானது தான். அதே நேரம், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கூட உயர்கல்வி பெறும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இவை ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தை அழிக்கிறது.
இதுதொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையை, இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்ஜெக்டிவ் ஸ்டடீஸ் உடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், முஸ்லீம் சமூகம் கைவிடப்பட்ட நிலையை உணர்த்துகிறது. இந்த ஆய்வை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ரூபினா தபஸ்ஸும் மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் முஸ்லீம்களின் இடைநிற்றல் விகிதம் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. முஸ்லீம்கள் மத்தியில் பள்ளி சேர்க்கை விகிதம் குறைந்து வருவதோடு, இடைநிற்றல் விகிதத்தில் மேலும் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 27 சதவீத முஸ்லிம்கள் உள்ள நிலையில், இடைநிற்றல் விகிதம் 27.2 சதவீதமாக உள்ளது. இதற்கு எதிராக, இந்துக்களின் இடைநிற்றல் 22 சதவீதமாக உள்ளது. பீகாரில் முஸ்லீம்களின் இடைநிற்றல் விகிதம் 13.9 சதவீதமாக உள்ளது.
அறிக்கையின்படி, முஸ்லிம்களின் வருமானம் அதிகரித்துள்ள நிலையில், அவர்களால் கல்வியில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், துரதிர்ஷ்டவசமாக, மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் மறைவுக்குப் பிறகு, எந்த முஸ்லீம் தலைவரும் கல்வியில் கவனம் செலுத்தவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் ரூபினா தபஸ்ஸும் தலித் மற்றும் ஆதிவாசி சமூகங்கள் பற்றிய அறிக்கைகளையும், முஸ்லீம் சமூகத்தின் கல்வி நிலை குறித்தும் சமர்பித்துள்ளார்.
ரூபினா தபஸ்ஸும் அறிக்கையின் படி, தேசிய சராசரியான 18.96 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, முஸ்லிம்களின் இடைநிற்றல் விகிதம் 23.1 சதவீதமாக உள்ளது.
வங்காளம், லட்சத்தீவு, அசாம் போன்ற மாநிலங்களில் இடைநிற்றல் சதவீதம் அதிகமாக இருப்பதாக ரூபினா கூறுகிறார். முஸ்லீம்கள், முறையான கல்வியில் நாட்டம் குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். "மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதை கொடுக்க வேண்டிய விதத்தில் கொடுக்கவில்லை." என்று வேதனை தெரிவித்துள்ளார்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை (6-14 வயதுக்குட்பட்டவர்கள்) பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கூறுகிறார். இருப்பினும், முஸ்லிம்கள் பெரும்பாலும் குழந்தைகளை 15 வயதிலேயே கல்வியை கைவிடச் செய்து அவர்களை வேலைக்கு அனுப்புகிறார்கள்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு காஷ்மீரிலும் நிலைவை இதைவிட மோசம் தான். ஜம்மு காஷ்மீரில் இடைநிற்றல் விகிதம் (சதவீதம்) இந்து 0%, முஸ்லிம் 0.7%; (முதன்மை வகுப்பினர்) இந்து 6.5%, முஸ்லிம் 5.5%; (நடுத்தர மற்றும் அதற்கு மேல் வகுப்பினர்) இந்து 6% முஸ்லிம் 12.8%; (இரண்டாம் வகுப்பினர்) இந்து 17.3%, முஸ்லிம்கள் 25.8%.
மேலும் உயர்நிலை வகுப்பில், இந்துக்கள் இடைநிற்றல் விகிதம் 15% ஆகவும், முஸ்லீம்கள் 15.4% (சதவீதம்) ஆகவும் உள்ளனர்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அசாமில் முஸ்லிம்கள் 34.22 சதவீதமாக உள்ளனர். இங்கும் முஸ்லிம்களின் இடைநிற்றல் விகிதம் கவலையளிக்கிறது என்கிறார் ருபீனா,
முன் மற்றும் ஆரம்ப வகுப்பில்
இந்து 6%, முஸ்லீம் 5.9% மற்றும் கிறிஸ்தவர்கள் 28.8%,
நடுத்தர மற்றும் மேல் வகுப்பில்
இந்து 15.0%, முஸ்லீம் 12.5% மற்றும் கிரிஸ்தவர் 26.4%,
இரண்டாம் வகுப்பில்
இந்து 28.0%, முஸ்லிம் 26.0% மற்றும் கிறிஸ்தவர்கள் 30.0%,
உயர்நிலை வகுப்பில்,
இந்து 25.8%, முஸ்லீம் 30.2%, கிறிஸ்தவர் 32.0%
முதுகலை பட்டப்படிப்பில்
இந்துக்கள் 13.9%, முஸ்லிம்கள் 19.6% மற்றும் கிறிஸ்தவர்கள் 19.2%. இதேபோல், இந்துக்கள் 11.5%, முஸ்லிம்கள் 9.6%, கிறிஸ்தவர்கள் 0.0%.
முஸ்லிம்கள் 27 சதவீதமாக இருக்கும் மேற்கு வங்கத்தில், முஸ்லீம்களின் இடைநிற்றல் சதவீதம் 27.2 ஆகவும், இந்துக்கள் 22.0 ஆகவும் உள்ளனர் என்கிறார். ஜார்கண்ட், கர்நாடகா, குஜராத், கேரளா, தெலுங்கானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் முஸ்லீம்கள் இடைநிற்றல் விகிதம் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கிறார். முஸ்லீம்களிடையே உள்ள இந்த இடைநிற்றலுக்கு, நிதிக் கட்டுப்பாடுகள் காரணம் என்றும் ருபீனா கூறுகிறார்.

