உத்தரபிரதேச மருத்துவமனை ஒன்றி இரத்தமேற்றுதலுக்கு உட்படுத்தப்பட்ட 14 சிறுவர்கள் ஹெபடைடிஸ் பி, சி மற்றும் எச்ஐவி போன்ற நோய்த்தொற்றுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள மருத்துவமனையின் மருத்துவர்கள் நேற்று திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தகவல் அளித்துள்ளனர். 

ஏற்கனவே சில உடல் உபாதைகள் உள்ள அந்த சிறார்கள், இப்போது கூடுதலாக ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. அரசாங்கத்தால் நடத்தப்படும் லாலா லஜ்பத் ராய் (எல்.எல்.ஆர்) மருத்துவமனையில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு தானம் செய்யப்பட்ட இரத்தத்தில் நடைமுறை ரீதியாக மேற்கொள்ளப்படும் வைரஸ்களுக்கான சோதனைகளில் தவறு இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். 

நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிகள்; சிறந்தவர்களுக்கு வாக்களியுங்கள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்!

எல்.எல்.ஆரின் குழந்தை மருத்துவப் பிரிவின் தலைவரும், இந்த மையத்தின் நோடல் அலுவலருமான டாக்டர் அருண் ஆர்யா, இது கவலைக்குரியது என்றும், மேலும் இது ரத்தம் ஏற்றுவதால் ஏற்படும் அபாயங்களைக் காட்டுகிறது என்றும் கூறினார். ஹெபடைடிஸ் நோயாளிகளை இரைப்பைக் குடலியல் துறைக்கும், எச்.ஐ.வி நோயாளிகளை கான்பூரில் உள்ள மையத்திற்கும் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார். 

தற்போதைய நிலவரப்படி, ​​180 தலசீமியா நோயாளிகள் இந்த மையத்தில் இரத்தமேற்றுதலைப் பெறுகிறார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஏதேனும் வைரஸ் நோய் இருக்கிறதா என்று சோதிக்கிறார்கள். தற்போது பாதிக்கப்பட்ட 14 சிறுவர்கள், தனியார் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளிலும், சில சமயங்களில் உள்ளூரிலும், அவர்களுக்கு அவசரமாக இரத்தம் ஏற்றப்பட்டபோதும் அங்கிருந்து ரத்தம் பெற்றுள்ளனர். 

ஒருவர் இரத்த தானம் செய்யும்போது, ​​அவர் தரும் இரத்தம் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த பரிசோதிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட பிறகு, சோதனைகள் மூலம் வைரஸைக் கண்டறிய முடியாத காலம் உள்ளது - இது "சாளர காலம்" என்று அழைக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பாதிக்கப்பட்ட 14 சிறுவர்கள் 6 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில், ஏழு பேருக்கு ஹெபடைடிஸ் பி, ஐந்து பேருக்கு ஹெபடைடிஸ் சி மற்றும் இருவர் எச்ஐவிக்கு நேர்மறை சோதனை செய்ததாக ஆர்யா கூறினார். கான்பூர் நகரம், தேஹாத், ஃபரூகாபாத், அவுரியா, எட்டாவா மற்றும் கன்னோஜ் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த சிறுவர்கள் வந்துள்ளனர். 

இந்தியாவில் அதிகம் திருடு போகும் 5 கார்கள்: என்ன காரணம்?