Asianet News TamilAsianet News Tamil

2050ல் பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும்.. அப்போ காவேரி ஆறு என்னவாகும்? அதிர்ச்சி தகவல்

வரப்போகிற 2050 ஆம் ஆண்டில் பெங்களூரு ஒரு நாளைக்கு 514 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Bengaluru Water Shortage: Experts Predicts 514-MLD Deficit in 2050
Author
First Published Apr 28, 2023, 1:38 PM IST

பெங்களூர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் காவிரி ஆற்றில் இருந்து 1,470 எம்எல்டி அளவிலான நல்ல தண்ணீரை பம்ப் செய்கிறது, ஆனால் தற்போதைய தேவை 2,100 எம்எல்டி. இந்த 630 எம்எல்டி இடைவெளியை போர்வெல் இணைப்புகள் மற்றும் டேங்கர் சப்ளை மூலம் நிரப்பப்படுகிறது.

வரப்போகிற 2050 ஆம் ஆண்டில் பெங்களூர் ஒரு நாளைக்கு 514 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை (MLD) எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் இப்போது கூறியுள்ளனர். இந்தியாவின் வருடாந்திர நன்னீர் தேவை 2050 ஆம் ஆண்டில் 1,180 மில்லியன் கன மீட்டராக (MCM) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தற்போதைய விநியோகம் 1,126 MCM மட்டுமே ஆகும்.

Bengaluru Water Shortage: Experts Predicts 514-MLD Deficit in 2050

இந்திய பிளம்பிங் அசோசியேஷன் (ஐபிஏ) ஏற்பாடு செய்த தண்ணீர், சுகாதாரம் மற்றும் பிளம்பிங் தயாரிப்புகளின் கண்காட்சியான 'ப்ளம்பெக்ஸ் இந்தியா 2023'-ல் தண்ணீர் பற்றாக்குறை குறித்து நிபுணர்கள் பேசியுள்ளனர். BWSSB எனப்படும் பெங்களூர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்) காவிரி ஆற்றில் இருந்து 1,470 எம்எல்டி (MLD) நன்னீரை பம்ப் செய்கிறது. ஆனால் தற்போதைய தேவை 2,100 எம்எல்டி ஆகும். 

இதையும் படிங்க..மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை.. முழு விபரம்.!!

இந்த 630 எம்எல்டி இடைவெளியை போர்வெல் இணைப்புகள் மற்றும் டேங்கர் சப்ளை மூலம் நிரப்பப்படுகிறது. இதுகுறித்து பேசிய  தேசிய நீர் இயக்கத்தின் கூடுதல் செயலாளரும், பணி இயக்குநருமான அர்ச்சனா வர்மா, “நல்ல பிளம்பிங் மற்றும் குறைந்த ஓட்டம் உள்ள சாதனங்கள் மூலம் தண்ணீரை சேமிக்க முடியும். மேலும் இங்குதான் ஐபிஏ போன்ற சங்கங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்ற முடியும்.

Bengaluru Water Shortage: Experts Predicts 514-MLD Deficit in 2050

தற்போது இந்தியாவில் பிளம்பிங் மற்றும் சானிட்டரிவேர் சந்தை ரூ. 50,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் குறைவாக உள்ளது. ஓட்ட நீர் சேமிப்பு கருவிகள் அதில் 5 சதவீதம் மட்டுமே உள்ளன” என்று கூறினார். இதற்கிடையில், ஐபிஏவின் தேசிய தலைவர் குர்மித் சிங் அரோரா, நகரங்களில் நீர்மட்டம் குறைவது குறித்து பேசினார். அவர் பேசியபோது, “பெங்களூருவின் சராசரி நீர்மட்டம் சுமார் 800 அடியாகவும், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு 100 அடியாகவும் இருந்தது.

பல நகரங்களில் நீர் அட்டவணைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இன்று, பெங்களூருவில் சராசரி நீர்மட்டம் சுமார் 800 அடியாக உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இது 100 அடியாக இருந்தது. 2025 ஆம் ஆண்டில், தண்ணீரின் தேவை 2,314 எம்எல்டி ஆக உயரும், 514 எம்எல்டி இடைவெளியை விட்டுவிடும்” என்று கூறினார். நிபுணர்களின் இந்த கணிப்பு பொதுமக்களிடையே எதிர்கால தண்ணீர் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..முதல்வர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியில் தீவைப்பு.. 144 தடை.! மொபைல் சேவை கட்.! அதிர வைக்கும் பின்னணி

Follow Us:
Download App:
  • android
  • ios