ஹரியானா மாநிலத்தில் சுவற்றில் துளை போட்டு வங்கி ஒன்றுக்‍குள் புகுந்த மர்ம நபர்கள் 37 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள பிர்ஹிகாலன் கிராமத்தில், கனரா வங்கியின் கிளை வங்கி அமைந்துள்ளது.

இந்த வங்கியின் சுவற்றில் நேற்றிரவு துளைபோட்டு நுழைந்த மர்மநபர்கள், வங்கியிலிருந்த 37 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதில் 10 லட்சம் ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளாகும். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மத்திய புலனாய்வு முகமை அதிகாரிகள், தடயவியல் குழு மற்றும் மோப்பநாய் உதவியுடன் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.