பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்...! காங். எம்.பி மனைவி புகார்!
மூத்த அரசியல் தலைவரின் மகனால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக கேரளா எம்.பி. ஜோஸ் மாணியின் மனைவி கூறி உள்ளார். இது கேரள அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளா காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.எம். மாணியின் மருமகள் நிஷா ஜோஸ் மாணி.
கேரள காங். கட்சியின் தலைவர் கே.எம்.மாணியின் மருமகள் நிஷா ஜோஸ் மாணி. இவர் புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். தி அதர் சைட் ஆஃப் திஸ் லைஃப் - ஸ்னிப்பட்ஸ் ஆஃப் மை லைஃப் அஸ் ய பொலிடீசியன் வைஃப் என்ற புத்தகத்தில் தான் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் 2012 ஆம் ஆண்டு தான் ரயிலில் பயணம் செய்தபோது, மூத்த அரசியல் தலைவர் ஒருவரின் மகனால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகவும், லஷ்மண் கோட்டைத் தாண்டி அந்த நபர் தொந்தரவு கொடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
நிஷா யாரை பற்றி குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. ஆனால், பெரிய அரசியல்வாதி மகன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்சி பணி காரணமாக இருவரும ஒன்றாக சென்றதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து டிக்கெட் பரிசோதகரிடம புகார் கூறினேன். அவர் நீங்கள் இரண்டு பேரும் பெரிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். கடைசியில் நீங்கள் ஒன்றாக சேர்ந்து கொள்வீர்கள். பின் என்னுடைய
வேலைக்குத்தான் பிரச்சனை வரும் என்று கூறினார் என்று அந்த புத்தகத்தில் நிஷா குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நிஷா ஜோஷ் மாணி கூறும் புகார், தன்னை மையப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், எனவே இது குறித்து விரிவான விசாரணை நடத்தும்படியும் எம்.எல்.ஏ. ஜார்ஜ் மகனான ஷோன் ஜார்ஜ் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.