ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் இடம், இதற்கு முன்பு கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, ஞானவாபி மசூதி வளாகத்தில், இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி (ஞானவாபி மசூதி கமிட்டி) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுக்கு ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை இடைக்காலத் தடை விதித்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மசூதி கமிட்டிக்கு அறிவுறுத்தியது.

இதையடுத்து, ஞானவாபி மசூதி கமிட்டி சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தது. மேலும், ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை தொல்லியல் ஆய்வுக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

அதன்படி, ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

கடன் சுமையில் இருப்பது மோடி அரசா? திமுக அரசா? அவதூறு பரப்பும் அரைகுறை அண்ணாமலை! கே.எஸ்.அழகிரி விளாசல்.!

முன்னதாக, ஞானவாபி மசூதியில் பழங்கால இந்துக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகக் கூறி, கடந்த மே மாதம் நான்கு பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், “குறிப்பிட்ட இடத்தில் ஸ்வயம்பு ஜோதிர்லிங்கம் லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்ததாகவும், கி.பி. 1017 இல் முகமதி கஜினியின் தாக்குதலிலிருந்து தொடங்கி, சிலை வழிபாட்டாளர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்த முஸ்லிம் படையெடுப்பாளர்களால் அது சேதமடைந்தது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதற்கு முன்பு நடத்தப்பட்ட வீடியோ ஆய்வின் போது, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை விடுத்து மற்ற இடத்தில் தொல்லியல் துறையின் அறிவியல் பூர்வ ஆய்வு நடத்த உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.