சுருக்கம்

Pahalgam Attack : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கவராத தாக்குதல் நாட்டையே உலுக்கிய நிலையில் அந்தந்த மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு சட்டவிரோதமாக இங்கு வசிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா கூறியிருக்கிறார்.

நாட்டையே உலுக்கிய சம்பவம் என்றால் அது ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளுக்கு எதிராக நடந்த பயங்கவரவாத தாக்குதல் தான். இந்த சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். அதன்படி, இந்தியா சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து, அட்டாரி எல்லையை மூடி, பாகிஸ்தான் விசாக்களை ரத்து செய்து, தூதரக அதிகாரிகளை வெளியேற்றி, உயர் ஸ்தானிகராலயப் பணியாளர்களைக் குறைத்துள்ளது.

இந்த நிலையில் தான் கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும், கர்நாடகாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்த வேண்டும் என்றார். இது தொடர்பாக ANIயிடம் பேசிய அவர் கூறியிருப்பதாவது: "பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இங்கு சட்டவிரோதமாக வசிப்பவர்கள் மீது நாம் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட வேண்டும்" என்று கூறினார்.

மத்திய அரசுக்கு ஆதரவையும் உதவியையும் தெரிவித்த பரமேஸ்வரா, "மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரிகளும் பெங்களூருவில் உள்ளனர். ஏதேனும் ஸ்லீப்பர் செல்கள் பற்றி எங்களுக்குத் தெரிந்தால், அவர்கள் குறித்து மத்திய அரசுக்குத் தெரிவிப்போம்" என்று மேலும் கூறினார்.

வியாழக்கிழமை, கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாரத் பூஷனின் பெங்களூருவின் மட்டிகேரில் உள்ள இல்லத்திற்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆளுநர் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடிய அவர், அவர்களின் மகத்தான இழப்பு நேரத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக புல்வாமாவா தாக்குதல் தான் மிக மோசமான தாக்குதல் சம்பவமாக இருந்தது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் கிட்டத்தட்ட 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு மிக மோசமான தாக்குதலாக பஹல்காம் சுற்றுலா பயணிகள் தாக்குதல் தான் அதிகபட்ச தாக்குதல் சம்பவமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.