Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தான் ராணுவத்தினர் என்னை நன்றாகவே நடத்துகிறார்கள்... செம்ம கெத்தா, கூலா பேசிய அபிநந்தன்!!

என்னைப் பாகிஸ்தான் ராணுவத்தினர் நன்றாகவே நடத்துகிறார்கள் என பாகிஸ்தான் ராணுவத்தில் பிடிபட்ட அபிநந்தன் கூறியுள்ளார்.

abinandhan said, pakistan army treated me very well
Author
Pakistan, First Published Feb 27, 2019, 8:24 PM IST

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்திய பாகிஸ்தான் இடையே வான் வழி தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்திய எல்லைக்குள் நுழைந்த எப்-16 ரக விமானங்கள் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப் பட்டது. அப்போது  தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பபட்டார்.  

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ ராணுவத்தினர் தனக்கு அளித்துள்ள பாதுகாப்பு குறித்து விமானி அபினந்தன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், விமானியிடம் பாகிஸ்தான் ராணுவத்தினர் கேள்வி எழுப்புவதும், அதற்கு அவர் பதிலளிக்கும் வீடியோவில். அதன்படி, முதலில் அவர் பெயர் என்ன உள்ளிட்ட விவரங்களைக் கேட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர், எங்களின் பாதுகாப்பில் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறோம் எனக் கேட்க, அதற்கு ``ஆம், இங்கு சிலவற்றைக் கூற விரும்புகிறேன்.

abinandhan said, pakistan army treated me very well

நான் இப்போது சொல்லும் கருத்துகளை இந்தியா சென்ற பிறகு மாற்றிக் கூற மாட்டேன். என்னைப் பாகிஸ்தான் ராணுவத்தினர் நன்றாகவே நடத்துகிறார்கள். என்னை விபத்திலிருந்து மீட்ட வீரர்கள், கேப்டன் என அனைவரும் நன்றாகவே நடத்தி வருகிறார்கள். இதைத்தான் இந்தியா ராணுவத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்தும் விதம் என்னை ஈர்த்துள்ளது.   

நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன். எனக்குக் கல்யாணம் முடிந்துவிட்டது’’ என்றார். தொடர்ந்து அவரிடம், உங்கள் விமானம் என்ன; என்ன பணிக்காக வந்தீர்கள் எனப் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கேட்க அதற்குப் பதில் கூற மறுத்துவிட்டார் அபினந்தன். 

Follow Us:
Download App:
  • android
  • ios