1942-ல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்து, நாட்டின் விடுதலைப் போக்கையே முழுமையாக மாற்றியது.
மும்பையின் கோவாலியா டேங்க் மைதானத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கியது. அன்று காந்தி ஆற்றிய எழுச்சிமிகு உரை மக்களை போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியது.
கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்விதான் இந்த இயக்கத்தைத் தொடங்க முக்கிய காரணம். சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் தலைமையிலான தூதுக்குழு, இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களின் ஆதரவைப் பெற முயன்றது.
காந்தியின் 'செய் அல்லது செத்து மடி' என்ற எழுச்சிமிகு உரைக்குப் பிறகு, காந்தி உட்பட இந்தியத் தலைவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் போராட்டம் தீவிரமடைந்தது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சட்டவிரோத அமைப்பு என அறிவிக்கப்பட்டது. 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.
ஆகஸ்ட் 9, 1942 அன்று, காவல்துறையின் எச்சரிக்கைகளையும் மீறி, அருணா ஆசஃப் அலி கோவாலியா டேங்க் மைதானத்தில் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றினார். இவர் காந்தி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்.
டாக்டர் உஷா மேத்தா தலைமையிலான இளம் தலைவர்கள், 'காங்கிரஸ் ரேடியோ' என்ற ரகசிய வானொலியை இயக்கினர். பிரிட்டிஷ் அரசிடம் சிக்காமல், போராட்டச் செய்திகளை இதன் மூலம் ரகசியமாக ஒளிபரப்பினர்.
ஆகஸ்ட் 8, 1942-ல் பாட்னா ஆட்சியர் அலுவலகத்தில் கொடியேற்ற முயன்ற 7 மாணவர்கள் காவல்துறையினரால் சுடப்பட்டனர். இவர்களின் நினைவாக 'ஷஹீத் ஸ்மாரக்' நினைவிடம் அமைக்கப்பட்டது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம், இந்தியாவை இனி ஆள்வது சாத்தியமில்லை எனப் பிரிட்டிஷாருக்கு உணர்த்தியது. இதோடு உலகப் போரின் முடிவும் இந்தியாவின் சுதந்திரத்திற்கு வழிவகுத்தது.