Asianet News TamilAsianet News Tamil

காதலி கண் முன்னே காதலன் சுட்டுக்கொலை! இளம் பெண் பலாத்காரம்!

a girl raped the stranger after lover shot killed
a girl raped the stranger after lover shot killed
Author
First Published Mar 6, 2018, 5:16 PM IST


காதலியின் கண் முன்னே காதலனை சுட்டுக் கொன்று விட்டு, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர் நபரை போலீசார் தேடி வருகின்றனர். வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மட்டுமல்லாது, துப்பாக்கி கலாச்சாரமும் அதிகரித்து
வருகிறது. 

மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கணேஷ் டிங்கா என்ற இளைஞரும், அவரது காதலியும் நேற்று இரவு சந்தித்துள்ளனர். அங்குள்ள ஒரு குளத்தின் அருகே அவர்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். 

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவர்கள் இருவரிடமும் பணம் கேட்டுள்ளான். ஆனால், கணேஷ் டிங்கரும், அவரது காதலியும் பணமில்லை என்று கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி அவர்களை மிரட்டியுள்ளான். 

மேலும், அந்த பெண்ணிடம் தவறாக நடக்கவும் அந்த நபர் முயன்றுள்ளான். காதலியிடம் தவறாக நடக்க முயன்ற அந்த நபரிடம் கணேஷ், எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உடனே அந்த நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கி மூலம், கணேஷ் டிங்கரை சுட்டுக் கொன்றுள்ளான். அது மட்டுமல்லாது, அந்த பெண்ணையும் பாலியல் பலராத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளளான்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் ஊருக்குள் சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து, போலீசிலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios