பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒடிசா மாணவர்கள் 70 கிலோ சாக்லேட்டில் பிரம்மாண்ட சிலை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த சிலையில் மோடியின் அரசுத் திட்டங்கள் மற்றும் இஸ்ரோவின் சாதனைகளும் இடம்பெற்றுள்ளன.

செப்டம்பர் 17 அன்று வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒடிசாவைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று, அவரைப் போன்ற தத்ரூபமான சாக்லேட் சிலையை உருவாக்கியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தச் சிலை முழுக்க முழுக்க சாக்லேட்டால் செய்யப்பட்டது. சுமார் 70 கிலோ எடை கொண்ட இந்தச் சிலையில், 55 கிலோ டார்க் சாக்லேட் மற்றும் 15 கிலோ வெள்ளை சாக்லேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புவனேஸ்வர் க்ளப் சாக்லேட்

புவனேஸ்வரில் உள்ள "க்ளப் சாக்லேட்" என்ற பேக்கிங் மற்றும் பேட்டிஸ்ரி பள்ளியைச் சேர்ந்த 15 பட்டயப் படிப்பு மாணவர்கள், ராகேஷ் குமார் சாஹு மற்றும் ரஞ்சன் பரிதா ஆகியோரின் தலைமையில் ஏழு நாட்களில் இதை உருவாக்கியுள்ளனர்.

இந்தச் சிலை, பிரதமர் மோடியின் முகபாவனைகள், உடை என அனைத்து விவரங்களிலும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மாணவர்களின் கலைத்திறனையும், நுட்பமான கைவினையையும் வெளிப்படுத்துகிறது.

Scroll to load tweet…

சாக்லேட் சிலையின் சிறப்பு

இந்தச் சிலையில், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா, பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா, ஸ்வச் பாரத் மிஷன் போன்ற முக்கிய அரசுத் திட்டங்களின் குறியீடுகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் சாதனைகளும் இதில் முக்கியப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வகையான சாக்லேட் சிலை, இந்தியாவில் பிரதமர் மோடிக்கு முதல் முறையாக உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது கலை மற்றும் திறனின் கலவையாக மாணவர்கள் இதனை வர்ணித்துள்ளனர்.

மோடியின் பிறந்தநாள்

கடந்த ஆண்டு, பிரதமர் மோடி தனது பிறந்தநாளை ஒடிசாவின் புவனேஸ்வரில் கொண்டாடினார். அப்போது, 2.5 மில்லியனுக்கும் அதிகமான பிரதமர் ஆவாஸ் யோஜனா வீடுகளைத் திறந்து வைத்தார். மேலும், மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான பெண்களுக்குப் பயனளிக்கும் சுபத்ரா யோஜனா திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

2023-ம் ஆண்டு, கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கான பி.எம். விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அவர் அறிவித்தார். 2022-ம் ஆண்டு தனது பிறந்தநாளில், மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் எட்டு சிறுத்தைகளை அவர் விடுவித்தார்.