ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவனை  மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவனை 15 மணி நேரத்திற்கும் மேலாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் கடந்த (மார்ச் 14) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த எட்டு வயது சிறுவனை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிறுவன் 43 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விதிஷா உதவிக் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) சமீர் யாதவ் இதுபற்றி பேசும்போது, ஆழ்துளைக் கிணற்றில் ஆக்சிஜன் சப்ளை செய்யப்படுகிறது, இருப்பினும், சிறுவனிடம் இன்னும் பேச முடியவில்லை. சிறுவனைக் கண்டுபிடிக்க வெப் கேமராவையும் பொருத்தியுள்ளோம். SDRF இன் மூன்று குழுக்களும் NDRF இன் 1 குழுவும் சம்பவ இடத்தில் உள்ளன. 

இதையும் படிங்க..டேட்டிங் ஆப் மூலம் நெருக்கமான காதல் ஜோடி.. கடைசியில் எல்லாத்தையும் முடிச்சுட்டு.!! இப்படியா

குழந்தை கண்காணிக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. எங்களால் இன்னும் அவருடன் பேச முடியவில்லை, அவருக்கு உணவும் வழங்கப்படவில்லை. இந்தச் சம்பவம் காலை 11 மணியளவில் நடந்தது. காவல்துறையும் நிர்வாகமும் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றன. ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே அசைவுகள் கவனிக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தையை விரைவாக வெளியே இழுக்க முயற்சிக்கிறோம் என்று கூறினார்.

மத்தியப் பிரதேசத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஐந்து வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தான். தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) அதிகாரிகளின் கூற்றுப்படி, திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தற்செயலாக 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 20 அடியில் சிக்கிக் கொண்டான். செவ்வாய்க்கிழமை காலை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சிறுவனை மீட்க மீட்புப் படையினர் முயன்றபோது, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க..2022ல் 11,000 பேர்.. 2023ல் 10,000 பேர் - ஊழியர்களை வீட்டுக்கு விரட்டும் மெட்டா நிறுவனம்