நியூ டவுனைச் சேர்ந்த 24 வயதான பைலட், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் போலந்து மற்றும் ஹங்கேரிய எல்லைகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களைக் காப்பாற்றியுள்ளார். 

நியூ டவுனைச் சேர்ந்த 24 வயதான பைலட், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் போலந்து மற்றும் ஹங்கேரிய எல்லைகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களைக் காப்பாற்றியுள்ளார். ஆபரேஷன் கங்காவின் பெருமைமிக்க உறுப்பினரான மஹாஸ்வேதா சக்ரவர்த்தி, கடந்த நான்கு ஆண்டுகளாக தனியார் விமானத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இதுவரை மீட்பு பணிக்காக சென்ற 6 விமானங்களை இயக்கி உள்ளார். பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 7ஆம் தேதிக்கு இடையில் போலந்தில் இருந்து சென்ற நான்கு விமானங்களிலும் ஹங்கேரியில் இருந்து சென்ற இரண்டு விமானங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மீட்பு பணியின் அனுபவம் குறித்து சக்ரவர்த்தி கூறுகையில், மாணவர்களை மீட்டது என் வாழ்நாளின் அனுபவம், அவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டு உயிர் பிழைத்ததில் அதிர்ச்சிகரமான கதைகள் இருந்தன. நான் அவர்களின் போராட்ட குணத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன் மற்றும் அவர்கள் தாயகம் திரும்பிய பயணத்தில் எனது பங்கை ஆற்றியதற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தியா 77 மீட்பு விமானங்களை இயக்கியது. பெரும்பாலான விமானங்கள் ஏர் இந்தியாவால் இயக்கப்பட்டன. இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற பிற விமான நிறுவனங்களும் இந்திய ராணுவத்துடன் இணைந்து தங்கள் சேவைகளை வழங்கின. எனது விமான நிறுவனத்திடமிருந்து எனக்கு இரவு தாமதமாக அழைப்பு வந்தது, மீட்புக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று கூறப்பட்டது. இரண்டு மணி நேரத்தில் பேக் செய்துவிட்டு கிளம்பினேன்.

நான் போலந்திலிருந்து இரண்டரை மணிநேரத்தில் இஸ்தான்புல்லுக்கு சென்றேன், அங்கிருந்து மீட்புப் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டோம். இந்திரா காந்தி ராஷ்டிரிய ஊரான் அகாடமி பட்டதாரி ஒருவர், ஏர்பஸ் ஏ 320 விமானத்தை ஒரு நாளைக்கு 13-14 மணிநேரம் ஓட்டியதை அடுத்து அவரது உடல் சொர்வடைந்தது. அவர், மாணவர்கள் பயத்தில் இருந்து மீளாமல் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் கடும் சோர்வாக உள்ளனர். நாங்கள் அவர்களுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கினோம், ஆனால் அவர்கள் தண்ணீர் கூட குடிக்கவில்லை என்று கூறியதாக தெரிவித்தார்.