Asianet News TamilAsianet News Tamil

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு இடையேயான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கர்னல் வீர மரணம் !!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Army colonel and major, deputy superintendent of JK Police killed in Anantnag gunfight says Officials-rag
Author
First Published Sep 13, 2023, 7:54 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார். பயங்கரவாதிகளின் தோட்டாக்களால் பலத்த காயமடைந்த கர்னல் மன்பிரீத் சிங் வீர மரணம் அடைந்தார். அவர் 19 ராஷ்டிரிய ரைபிள்ஸில் கட்டளை அதிகாரியாக இருந்தார். 2020-ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான என்கவுன்டரில் ஒரு கமாண்டிங் அதிகாரி கொல்லப்படுவது இதுவே முதல்முறை. 

ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் கர்னல் மன்பிரீத் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி பலத்த காயமடைந்தனர். காடோல் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதன்கிழமை காலை முதல் என்கவுன்டர் தொடங்கியது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தகவலை காஷ்மீர் மண்டல போலீசார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். அனந்த்நாக் கோகர்நாக் பகுதியில் என்கவுன்டர் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதில் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். ராணுவத்தின் கூற்றுப்படி, பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், செப்டம்பர் 12-13 நள்ளிரவில் ராணுவமும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டன.

விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!

“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி

Follow Us:
Download App:
  • android
  • ios