முகத்தில் தோன்றும் பரு, தேமல், கரும்புள்ளிகள் நீங்கள் இந்த மூலிகை உதவும்...
சில மூலிகைகளும் அவற்றால் கிடைக்கும் பலன்களும்...
1.. அதிமதுரம்:
இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண் தீரும்.
2. சித்தரத்தை:
இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு நீங்கும்.
3. ஜாதிக்காய்:
விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள் தீரும்.
4. வெந்தயம்:
பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம் போகும்.
5. வசம்பு:
வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள் நீங்கும்.
6. ஆவாரம்பூ:
அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம் தீரும்.
7. செம்பரத்தம்பூ:
தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள் குணமாகும்.
8. ரோஜாபூ:
இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்.
9. முல்தானி மட்டி:
முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்) நீங்கும்.
10. திருபலாசூரணம்:
வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள் தீரும்.
11. திரி கடுகு சூரணம்:
பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்.
12. வசம்பு:
வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள் தீரும்.
13. கரிசலாங்கண்ணி:
மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம் குணமாகும்.
14. கண்டங்கத்திரி:
சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம் போகும்.
15. கருந்துளசி:
இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம் குறையும்.
16. கறிவேப்பிலை:
பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.