நம் முன்னோர்கள் காலை எழுந்தவுடன் பல் துலக்குதலையும், ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னும் 16 முறை வாய்க்கொப்பளிப்பதையுமே வலியுறுத்திச் சென்றுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவை எளிமையானவை. 16 முறை வாய்க்கொப்பளிக்க நேரமில்லாதபோது ஒருவர் உணவு உண்ணவே உட்காரக்கூடாது என்பது பெரியவர்கள் கருத்து. அந்தளவு நேரம் எப்போது கிடைக்குமோ அப்போது மட்டுமே உண்ணல் தகும்.

இரவு உணவை மாலை 6-00 மணிக்கே முடித்து 2-3 மணி நேரம் கழித்துப்படுக்கப்போகும்போது பல் சுத்தமாகப் படுப்பதே நல்லது. அதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். இரவு உணவு உண்ட உடனே படுக்கச் செல்வது என்பது பற்களில் அழுக்குகள் தங்க, தேங்க நாம் வழி செய்து கொடுப்பதே ஆகும்.

பிரஷ் கொண்டு தேய்த்தல், கொப்பளித்து நீக்குவது போல் சிறப்பாகாது. 50 மி.லி. தண்ணீரை வாயில் 5 நிமிடம் வெறுமனே வைத்திருக்கவும்.

மேற்படி தண்ணீர் கெட்டிப்படுவதை உணர:

1. சுரக்கும் உமிழ் நீர் அடர்த்தி அதிகமாதலால் வாயில் உள்ள நீர் கெட்டிப்படும்.

2. பல் இடுக்குகளில் உள்ள மாவுகள் கரைந்து நீர் கெட்டிப்படும். இந்நிகழ்வை அனுபவ பூர்வமாக அறியலாம்.