MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்! களமிறங்கிய ஐ.நா! இரு நாடுகளிடமும் சொன்னது என்ன?

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்! களமிறங்கிய ஐ.நா! இரு நாடுகளிடமும் சொன்னது என்ன?

இந்தியாவும், பாகிஸ்தானும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : Rayar r
| Updated : May 06 2025, 09:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
India Pakistan War Tension

India-Pakistan War Tension

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. பயங்கரவாதிகளின் கோழத்தனமான தாக்குதலால் வெகுண்டெழுந்த இந்தியா பாகிஸ்தான் உடனான உறவுகளை முற்றிலுமாக துண்டித்தது. சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து பாகிஸ்தானுக்கு மீள முடியாத அடியை கொடுத்த இந்தியா, நமது ராணுவம் மூலம் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட தயராகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்

இதனால் பதற்றத்தில் உள்ள பாகிஸ்தான் 'இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம்' என மிரட்டல் விடுத்து வருகிறது. மேலும் தங்களுக்கு ஆதரவாக சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் பாகிஸ்தான் ஆதரவு கேட்டு வருகிறது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்தியா பக்கமே உள்ளன. சீனா பாகிஸ்தான் பக்கம் நிற்கும் என்றாலும் அந்த நாடு இன்னும் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
 

Related Articles

Related image1
பாகிஸ்தான் 'ஃபதா' ஏவுகணை சோதனை: பதற்றம் அதிகரிப்பு
Related image2
பஹல்காம் சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர் புடின் முதன் முறையாக கடுமையான கண்டனம்!!
34
இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா அட்வைஸ்

இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா அட்வைஸ்

இதற்கிடையே ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா, பாகிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டுகிறது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இரு நாடுகளும் பொறுமை காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பல ஆண்டுகளாக பதற்றம் நிலவி வருகிறது. இரு நாட்டின் உறவுகளும் கொதிப்பாக உள்ளதை பார்த்து நான் வேதனைப்படுகிறேன். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. 
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாக்குதல் நடத்தியவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும்'' என்று தெரிவித்தார்.

44
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்

தொடர்ந்து அன்டோனியோ குட்டெரஸ் தனது அறிக்கையில், ''இந்த நெருக்கடியான நேரத்தில் இராணுவ மோதலைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். எஏனெனில் இது நிலைமையை எளிதில் கட்டுப்பாட்டை மீறிச் செல்ல வைக்கும். எந்த ஒரு பிரச்சனைக்கும் ராணுவம் தீர்வாக அமையாது. இரு நாடுகளும் பின்வாங்கி அமைதியை நோக்கி நகர வேண்டிய நேரம் இது. அமைதியை மீட்டெடுப்பதற்கும், தூதரக முயற்சிகளை ஆதரிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளது'' என்றார்.

மேலும் ''இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாட்டின் அரசுகளையும் நான் மதிக்கிறேன். இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பணிக்கு, குறிப்பாக ஐ.நா. அமைதி காக்கும் பணிக்கு அவர்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்'' என்று அன்டோனியோ குட்டெரஸ் கூறியுள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா
பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீர்
இந்தியா-பாகிஸ்தான் போர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Petrol Price Cut: பெட்ரோல் விலை 4 ரூபாய் குறைப்பு.. அதிரடியாக அறிவித்த அரசு.. மக்களுக்கு நிம்மதி!
Recommended image2
Free Trip : உணவுப் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இலவசமாக ஃபின்லாந்து நாட்டுக்குச் சென்று வர அரிய வாய்ப்பு!
Recommended image3
Burj Khalifa: உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபாவில் ஒரு வீடு வாங்க எவ்வளவு கோடி வேணும் தெரியுமா? விலை கேட்டா தலை சுத்திடும்.!
Related Stories
Recommended image1
பாகிஸ்தான் 'ஃபதா' ஏவுகணை சோதனை: பதற்றம் அதிகரிப்பு
Recommended image2
பஹல்காம் சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர் புடின் முதன் முறையாக கடுமையான கண்டனம்!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved