MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • மெக்கா - மதினாவில் பேருந்து தீப்பிடித்து 42 இந்தியர்கள் பலி.. ஹஜ் புனித பயணம் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

மெக்கா - மதினாவில் பேருந்து தீப்பிடித்து 42 இந்தியர்கள் பலி.. ஹஜ் புனித பயணம் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

தெலங்கானாவைச் சேர்ந்த உம்ரா யாத்ரீகர்கள் மெக்காவிலிருந்து மதினா சென்ற பேருந்து, டீசல் டேங்கர் மீது மோதியதில் வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இந்தவிபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

2 Min read
Velmurugan s
Published : Nov 17 2025, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மெக்காவில் நடந்த கோர விபத்து
Image Credit : x

மெக்காவில் நடந்த கோர விபத்து

தெலங்கானாவைச் சேர்ந்த உம்ரா யாத்ரீகர்களின் அமைதியான ஆன்மீகப் பயணம், திங்கள்கிழமை அதிகாலையில் நினைத்துப் பார்க்க முடியாத சோகத்தில் முடிந்தது. மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற பேருந்து, டீசல் டேங்கர் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 42 இந்தியர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக நம்பப்படுகிறது.

25
தகவல் அறிந்து அதிர்ச்சியில் குடும்பத்தினர்
Image Credit : our own

தகவல் அறிந்து அதிர்ச்சியில் குடும்பத்தினர்

இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது. நீண்ட யாத்திரை நாளுக்குப் பிறகு பெரும்பாலான பயணிகள் உறக்கத்தில் இருந்த நேரத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. சில நொடிகளில் பேருந்து முழுவதும் தீ பரவியதால், தப்பிக்க வாய்ப்பில்லாமல் போனது.

ஹைதராபாத் மற்றும் தெலங்கானா முழுவதும் உள்ள குடும்பத்தினருக்கு இந்த திடீர் செய்தி இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது. விபத்துக்கு சில மணிநேரங்களுக்கு முன்புதான் உறவினர்கள் பலரும் யாத்ரீகர்களுடன் பேசியுள்ளனர். அதுவே கடைசி உரையாடலாக இருக்கும் என அவர்கள் அறிந்திருக்கவில்லை.

சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர்வாசிகள், குழப்பமும் பேரழிவும் நிறைந்த காட்சியை விவரித்தனர். பலியானவர்களில் பலர் உடனடியாக இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. சவுதி அதிகாரிகள் இனு்றமு் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை வெளியிடவில்லை, ஆனால் இந்திய அதிகாரிகள் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

Related Articles

Related image1
ஹஜ் பயணம் செய்ய விருப்பமா.? குட் நியூஸ் சொன்ன அரசு- கட்டணமின்றி விண்ணப்பிக்க இதோ வழிமுறை
Related image2
ஹஜ் யாத்திரையின் இருண்ட பக்கம்: மறக்க முடியாத சோக நிகழ்வுகள்
35
சோகத்தில் முடிந்த புனிதப் பயணம்
Image Credit : google

சோகத்தில் முடிந்த புனிதப் பயணம்

தெலங்கானா மாநில ஹஜ் குழு பயணிகளில் கிட்டத்தட்ட அனைவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் அடங்குவர் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. பலர் பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த பணத்தில் இந்த ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

ஒரே யாத்ரிகர் மட்டுமே உயிர் பிழைத்ததாகக் கூறப்படுகிறது, அவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.

45
உதவி எண்கள் அறிவிப்பு
Image Credit : Getty

உதவி எண்கள் அறிவிப்பு

உறவினர்களிடையே பீதி பரவியுள்ள நிலையில், தெலங்கானா அரசு உடனடி ஆதரவை வழங்க மாநிலச் செயலகத்தில் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. துல்லியமான தகவல்களைச் சேகரிக்க வெளியுறவு அமைச்சகம் மற்றும் சவுதி அதிகாரிகளுடன் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

அவசர உதவி எண்கள்

சவுதி இலவச எண்: 8002440003 ஜெட்டாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம்: 24×7 உதவி கிடைக்கும்

In view of a tragic bus accident near Madina, Saudi Arabia, involving Indian Umrah pilgirms, a 24x7 Control Room has been set up in Consulate General of India, Jeddah. 

The contact details of the Helpline are as under:

8002440003 (Toll free)
0122614093
0126614276
0556122301…

— India in Jeddah (@CGIJeddah) November 17, 2025

55
இந்தியா இரங்கல்
Image Credit : Getty

இந்தியா இரங்கல்

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த சோக நிகழ்வால் " ஆழ்ந்த அதிர்ச்சி" அடைந்ததாகக் கூறினார். ரியாவில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து ஆதரவையும் வழங்கி வருவதாக அவர் உறுதியளித்தார்.

Deeply shocked at the accident involving Indian nationals in Medinah, Saudi Arabia.

Our Embassy in Riyadh and Consulate in Jeddah are giving fullest support to Indian nationals and families affected by this accident. 

Sincere condolences to the bereaved families. Pray for the…

— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 17, 2025

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved