MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • Muammar Gadafi | இவரை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? யார் இந்த கடாஃபி?

Muammar Gadafi | இவரை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? யார் இந்த கடாஃபி?

லிபியாவை ஆண்ட சர்வாதிகாரி முயம்மர் கடாஃபி மறைந்து 13 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஒரு நிலையான அரசியல் ஆட்சி அமையவில்லை. தன் ஆட்சிகாலம் முழுவதிலும் மக்களை பயத்தில் வைத்திருந்த கடாஃபி கடந்து வந்த பாதையை இதில் காணலாம். 

2 Min read
Author : Dinesh TG
Published : Aug 12 2024, 09:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

லிபியாவில் முயம்மர் கடாஃபி, 1969ம் ஆண்டு ராணுவ கிளர்ச்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய போது, லிபிய மக்களின் மீட்பராக பார்க்கப்பட்டார். அப்போது 27 வயதான இளம் ராணுவ தளபதியான கடாஃபி, சக ராணுவத்தினரால் அண்ணா என்று செல்லமாக கூப்பிடப்பட்டார். அந்த அளவுக்கு அவருக்கு நற்பெயர் இருந்தது. அவரும் ஆட்சிக்கு வந்தபுதிதில் தன்னை மக்களின் தலைவனாகவே காட்டிக்கொண்டார்.

1942-ம் ஆண்டு பிறந்த முயம்மர் கடாஃபி Bedouin என்ற பழங்குடி இன பெற்றோருக்கு பிறந்தவர். தனது பழங்குடியின வழிமுறையை விளம்பரப்படுத்துவதில் அவர் பெருமைகொண்டார். எடுத்துக்காட்டாக தன்தை தேடி வரும் விருந்தாளிகளை ஒரு கூரை கொட்டகையில் வரவேற்பது முதல், தான் செல்லும் வெளிநாட்டு பயணங்களில் இந்த கொட்டகையை அவ்விடத்திற்கே கொண்டு சென்று அதை காட்சிப்பொருளாக வைப்பதுவரை தனது பழங்குடியின பின்புலத்தை அவர் மறந்ததில்லை.

23

கடாஃபியின் சகிப்புத்தன்மையற்ற ஆட்சியில் எந்தவித எதிர்ப்புக்கே இடமில்லை. எதிர்த்தவர்களுக்கு சிறை அல்லது மரணம் இதுஒன்றே தண்டனையாக விதிக்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே கடாஃபி சர்ச்சைக்குரிய மன்னராக இருந்துவந்தார். அவரது செய்கையால் உலக அரங்கிலும் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தது.

லண்டனில் இருக்கும் லிபிய தூதரகம் அருகே பிரிட்டன் காவல்துறை அதிகாரி யுவன்னா பிளட்சர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, லிபியா நாட்டுடனான தனது உறவை பிரிட்டன் முறித்துக்கொண்டது.

வங்கதேசத்தில் நடிகர் சாண்டோ கான் மற்றும் அவரது தந்தையை அடித்துக் கொன்ற கும்பல்!
 

33

4 ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவின் ஜம்போ விமானம் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலில் 270 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு 2 லிபியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து சர்வதேச உலக அரங்கில் கர்னல் கடாஃபி பெரும் தீவிரவாதியாக மாறினார்.

பல ஆண்டுகளாக லிபியாவை சர்வாதிகாரி கர்னல் கடாஃபி ஆட்சிசெய்துவந்த நிலையில், அமெரிக்க படைகள் லிபியாவை கைப்பற்ற நினைத்தன. தொடர்ந்து, கடாஃபி தலைமறைவு வாழ்க்கை வாழத்தொடங்கினார். மேலும், தனது ஆட்சிக்கு எதிரான மக்களையும், ஆட்சியாளர்களையும் ஒழிக்க முற்பட்டார். கடைசியில் ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட கடாஃபி சொந்த ஊரான சித்ரேரில் தஞ்சமடைந்தார். கடைசியில் அங்கேயே கொல்லப்பட்டார்.

வங்கதேசத்தில் சித்துவேலை செய்த அமெரிக்கா! நடந்தது இதுதான்.. ஷேக் ஹசீனா ஓபன் டாக்!!
 

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
பூமிக்கு வரும் ஏலியன்கள்? பாபா வங்காவின் கணிப்பு நிஜமாகிறதா! அதிர வைக்கும் தகவல்!
Recommended image2
நள்ளிரவில் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாக். பிரதமர்.. இம்ரான் கானின் நிலை..?
Recommended image3
ஈரானிடம் நடுங்கும் டிரம்ப்... அமரிக்க கப்பல்களுக்கு தண்ணீருக்கு அடியில் புதை குழி தோண்டிய காமெனி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved