MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • History Of Australia | ஆஸ்திரேலியா ரொம்ப பெருசு! ஆனா மக்கள் தொகை ரொம்ப கம்மி! - ஏன் தெரியுமா?

History Of Australia | ஆஸ்திரேலியா ரொம்ப பெருசு! ஆனா மக்கள் தொகை ரொம்ப கம்மி! - ஏன் தெரியுமா?

Why 90% of Australia is Empty? | ஆஸ்திரேலியா உலகின் 6வது பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடு. வல்லரசு நாடுகளில் இதுவும் ஒன்று. இயற்கை வளம், சுகாதாரம், பாதுகாப்பு அனைத்திற்கும் பேர்போன இந்த ஆஸதிரேலியாவில் வெறும் 10% நிலப்பரப்பில் மட்டுமே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 90% நிலப்பரப்புகள் காலியாக உள்ளன ஏன் என யோசித்தது உண்டா...? இதோ பதில் இப்பதிவில் காணலாம்! 

2 Min read
Dinesh TG
Published : Aug 13 2024, 08:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ஆஸ்திரேலியா வரலாறு

ஆஸ்திரேலியா பற்றி தெரிந்துகொள்ள அதன் வராற்றை நாம் அறிந்துகொள்வது அவசியம். 1606ம் ஆண்டு Willem Janszoon என்கிற டச்சு டிராவலர் கடல் பயணத்தின் போது புயலில் சிக்க ஒரு தீவில் இறங்கினார். அந்த தீவுதான் இன்றைய ஆஸ்திரேலியா. அவருக்கு பின்னர், 163 ஆண்டுகள் கழித்து 1770ம் ஆண்டு பிரிட்டிஸ் லெப்டினன்ட் James Cook 1770-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையில் வந்து இறங்கினார். குக் மற்றும் அவரது குழுவினர் அந்த தீவுக் கண்டத்தில் இருந்த 400-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களுடன் போரிட்டனர்.

போர் முடிந்தபாடில்லை, ஜேம்ஸ் குக் தோற்கும் நிலையில், கேப்டன் பிலிப் தலைமையில் பிரிட்டிஸ் கப்பற்படையினர் சிட்னி கோவுக்கு வந்து இறங்கியது. பின்னர், பிரிட்டிஷாரின் கைஓங்க, பழங்குடியினரிர் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டனர்.
 

27

நாடோடிகள் அல்ல

பிரிட்டிஷ் வருகைக்கு முன்பு வரை சிட்னியில் வெவ்வேறு பழங்குடியின மக்கள் குழுக்களாக வசித்து வந்தனர். அவர்கள் கடற்கரையோரங்களில் வாழ்ந்த மக்கள், நீர் மற்றும் கடல் பகுதிகளில் மீன்பிடித்து வேட்டையாடினர். மேலும் சுற்றியுள்ள காட்டுபகுதிகளிலிருந்து தேவையான உணவை அறுவடை செய்து கொண்டனர். பழங்குடி மக்கள் அவ்விடத்தில் தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்ததால் சொந்த நிலத்தவை விட்டு செல்ல வேண்டிய அவசியம் வரவில்லை. மேலும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசி வளங்கள் ஏராளமாக கொட்டிக்கிடந்தன.

இரவையும் பகலையும் பிரிக்கும் மெல்லிய கோடு! நாசா வெளியிட்ட பூமியின் அபூர்வமான புகைப்படம்!!
 

37

முடிவுக்கு வந்த பழங்குடினர் சமூகம்

1770-ல் லெப்டினண்ட் ஜேம்ஸ் குக் மற்றும் ஜேம்ஸ் பிலிப் வருகை இந்த ஆஸ்திரேலிய பழங்குடியின மக்களின் புராதான வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது. ஆஸ்திரேலியாவின் சிட்னியை கைப்பற்றிய பிரிட்டிஸ்காரர்கள் அங்கு சிறைக் கைதிகளை அடைத்து வைக்க பயன்படுத்தினர். அத்ன விளைவாக பரவியதுதான் தொற்றுநோய்.
 

47

நோய் மற்றும் அழிவு

கப்பலில் வந்த மாலுமிகள் மற்றும் சிறை கைதிகளுக்கு இருந்த பெரியம்மை, சிபிலிஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற வைரஸ் நோய்கள் பழங்குடியின மக்களுக்கும் பரவியது. பழங்குடியின மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெரியம்மை நோயால் இறந்தனர்.

இஸ்ரேல் பற்றிய 15 அதிசயத் தகவல்கள்

57

ஆஸ்திரேலிய காலநிலை

தொடர்ந்து முன்றேறிய பிரிட்டிஸ் படையினர், ஆஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பை சொந்தம் கொண்டாட நினைத்தனர். அது பெரும் பாலைவனமாக இருந்ததால் அங்கு சொந்தம் கொண்டாடினாலும் வசிக்க வாய்ப்பு இல்லை. கொடூர வெயிலின் தாக்கத்தில் சிக்க பிரிட்டிஸ் படை வீரர்ரகள் மெல்ல மெல்ல செத்து மடிந்தனர்.
 

67

ஆஸ்திரேலியாவில் தங்கம்

1850ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் Baturst பகுதியில் தோண்டுமிடமெல்லாம் தங்கம் கிடைக்கவும், அன்றிலிருந்து அதன் வளர்ச்சி அபரிமிதமானது. ஆஸ்திரேலியாவுக்கு வந்திறங்கிய பலதரப்பட்ட மக்களாலும், கலவையான கலாச்சாரம், இனம், மொழி, பழக்கவழக்கம் கொண்ட சமுதாயமாய் ஆஸ்திரேலியா உருவாக தொடங்கியது. தொடர்ந்து உருவாகிக்கொண்டே வளர்கிறது.
 

77

பாலைவனம் & மலைத்தொடர்

ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரப் பகுதிகளிள் மட்டுமே மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே அப்பகுதிகளில் மட்டுமே மக்கள் வாழ்கிறார். உள்ளே உள்ள பறந்த நிலப்பரப்பில் குளிர்காற்று தங்க வாய்ப்பு இல்லாததால் மழைபொழிவு இல்லாமல் அப்பகுதிகளில் சுமார். 49.7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்கிறது. அவ்வளவு வெப்பநிலையில் மனிதர்கள் வாழ உகந்த சூழ்நிலை அல்ல. மேலும், கிரேட் விக்டோரியா, தி கிரேட் சாண்டி, சிம்சன், டிராரி, பெடிர்கா, கிப்சன், தனாமி ஆகிய 7 பெரிய பாலைவனங்கள் உள்ளன. நியூ சவுல் வேல்ஸ்க்கும், மக்கள் வாழும் பகுதிக்கும் இடையே மிக நீண்ட மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் குளிர் காற்றை பாலைவனப்பகுதிக்குள் அனுமதிக்காததே அப்பகுதிகள் வரண்ட நிலமாக மாற ஒரு காரணமும் கூட.
 

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved