MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 47 வயதில் கள்ளக்காதல்.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி.. கதையை முடித்த ராஜமாணிக்கம்! அதிர்ச்சி தகவல்

47 வயதில் கள்ளக்காதல்.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி.. கதையை முடித்த ராஜமாணிக்கம்! அதிர்ச்சி தகவல்

கரூர் தொழிற்பேட்டை அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால், கணவரை அவரது மனைவியே காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 30 2026, 06:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

கரூர் தொழிற்பேட்டை அருகே உள்ள ஆர்.எஸ்.புரம் காட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரைகுறையாக எரிந்த நிலையில் ஆண் உடல் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

25
Image Credit : Asianet News

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கரூர் தொழிற்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார்(47) என்பது தெரியவந்தது. இவர் கரூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதே ஜவுளி நிறுவனத்தில் நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூரை சேர்ந்த ராஜமாணிக்கம்(44) என்பவர் தங்கி சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செந்தில்குமார் வீட்டுக்கு ராஜமாணிக்கம் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது செந்தில்குமார் மனைவி பாண்டீஸ்வரிக்கும்(47) ராஜமாணிக்கத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Related image1
பொதுமக்களே உஷார்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
Related image2
சென்னை நடுநடுங்க வைத்த கொலை.. ஒரே இரவில் குடும்பத்தை கருவறுத்த கும்பல்.. 3 நாட்களுக்கு பிறகு பெண்ணின் உடல் கண்டெடுப்பு!
35
Image Credit : our own

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் பேச இருக்க முடியவில்லை. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் செந்தில்குமாரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

45
Image Credit : our own

அதன்படி கடந்த 25ம் தேதி செந்தில்குமாரை மது அருந்த ராஜமாணிக்கம் நைசாக பேசி அழைத்து சென்றார். மது அருந்தி கொண்டிருக்கும்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராஜமாணிக்கம் பீர் பாட்டிலால் செந்தில்குமார் தலையில் அடித்துள்ளார். இதில் சுருண்டு விழுந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

55
Image Credit : Google

பிறகு தான் வாங்கி வந்த டீசலை எடுத்து செந்தில்குமார் உடலில் ஊற்றி தீ வைத்து விட்டு ராஜமாணிக்கம் அங்கிருந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜமாணிக்கம், பாண்டீஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். உல்லாசத்துக்காக தாலி கட்டிய கணவனை கொலை செய்ய மனைவியே ஸ்கெட்ச் போட்டு கொடுத்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
கணவன்
மனைவி
Latest Videos
Recommended Stories
Recommended image1
நெல்லை டூ பழனி, பொள்ளாச்சிக்கு புது ரயில் வந்தாச்சு.. பயணிகள் குஷி! அட்டவணை என்ன?
Recommended image2
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்.. திருச்சியில் பிரதமர் மோடி சூளுரை..
Recommended image3
Now Playing
"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
Related Stories
Recommended image1
பொதுமக்களே உஷார்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
Recommended image2
சென்னை நடுநடுங்க வைத்த கொலை.. ஒரே இரவில் குடும்பத்தை கருவறுத்த கும்பல்.. 3 நாட்களுக்கு பிறகு பெண்ணின் உடல் கண்டெடுப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved