- Home
- Tamil Nadu News
- மாதம் 8 ஆயிரம் ரூபாய் உதவி தொகையோடு தொழிற் பயிற்சி.! மாணவர்களுக்கு குட் நியூஸ் வெளியிட்ட தமிழக அரசு
மாதம் 8 ஆயிரம் ரூபாய் உதவி தொகையோடு தொழிற் பயிற்சி.! மாணவர்களுக்கு குட் நியூஸ் வெளியிட்ட தமிழக அரசு
தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு மாதம் 8,000 ரூபாய் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிப்ரவரி 10, 2025 அன்று தேசிய தொழிற்பழகுநர் முகாம் நடைபெறும்.

மாதம் 8 ஆயிரம் ரூபாய் உதவி தொகையோடு தொழிற் பயிற்சி
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி, பஸ் பாஸ், கல்வி உதவி தொகை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதே போன்று உயர் கல்வி சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாதம் 8ஆயிரம் ரூபாய் உதவி தொகையோடு தொழிற்பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐடிஐ மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐடி,ஐ, படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில், பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் முகாம்
மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela) 10.02.2025 - 9.00 மணியளவில் வடசென்னை-21 ஆர்.கே.நகர். அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (வடசென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில்) நடைபெற உள்ளது.
இதில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற் பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர்.
மாதம் 8ஆயிரம் உதவி தொகை
தற்போது தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்த பட்சம் ரூ.8000/- மற்றும் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate) வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்க அழைப்பு
இதுவரை தொழிற் பழகுநர் பயிற்சி (NAC)முடிக்காத அரசு, தனியார் தொழிற் நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் பயிற்சி www.apprenticeshipindia.gov.in இணையத முகரியில் பதிவு செய்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.