MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தவெக முதல் அரசியல் மாநாடு நடைபெறுமா.? விஜய்க்கு வந்த ஷாக் தகவல்

தவெக முதல் அரசியல் மாநாடு நடைபெறுமா.? விஜய்க்கு வந்த ஷாக் தகவல்

தமிழகத்தில் திமுக-அதிமுகவுக்கு போட்டியாக நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டிற்கு சிக்கல் உருவாகியுள்ளது. 

2 Min read
Ajmal Khan
Published : Oct 13 2024, 08:18 AM IST| Updated : Oct 13 2024, 08:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அரசியல் களத்தில் விஜய்

தமிழகத்தில் திமுக- அதிமுக என்ற இரண்டு கட்சிகள் தான் கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். திரைத்துறையில் ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய்,

அடுத்ததாக மக்களின் முன்னேற்றத்தில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார். தனது கடைசி படத்தில் நடித்து வரும் விஜய் அரசியலுக்கு பிறகு படத்தில் நடிக்கப்போவதில்லையென கூறியுள்ளார். எனவே விஜய்யின் 69வது படத்தை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.
 

25

கட்சி கொடி,மாநாடு- அதிரடியாக இறங்கிய விஜய்

இந்தநிலையில் தான் தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை பதிவு செய்த விஜய் அங்கீகாரமும் பெற்றுள்ளார். இதனையடுத்து தனது கட்சியின் கொடி மற்றும் சின்னத்தையும் வெளியிட்டுள்ளார். அடுத்ததாக தனது கட்சியில் முதல் அரசியல் மாநாட்டிற்கான தேதியை அறிவித்தார். கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பல இடங்களில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. கடைசியாக விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி கோரி காவல்துறைக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது. காவல்துறையும் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு 33 கேள்விகள் கேட்கப்பட்டது.

35

மாநாட்டிற்கு நிபந்தனையோடு ஒப்புதல்

குறிப்பாக மாநாடு நடைபெறும் நேரம் என்ன.? எத்தனை பேர் மாநாட்டிற்கு வருவார்கள். அடிப்படை வசதிகள என்ன, மின்சார இணைப்பு மற்றும் மாநாடு நடைபெறும் இடத்தில் உரிமையாளர் அனுமதி போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது. இதனையடுத்து தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர்கள் பல கட்ட ஆலோசனைக்கு பிறகு 33 கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது.

அடுத்ததாக பரீசிலனை செய்த காவல்துறை மாநாடு நடத்த 22 நிபந்தனைகளோடு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருந்த போதும் மாநாடு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு தான் அனுமதி கிடைத்ததால் உடனடியாக மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மீண்டும் மாநாடு தொடர்பாக தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியானது.

அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா!!

45
Thalapathy Vijay

Thalapathy Vijay

மாநாடு மேடை பணி தொடங்கியது

அதன் படி விஜய் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாநாடு பந்தல் பணிகள் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வந்தது. சுமார் 50ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் நிபந்தனைகளின் படி அருகில் உள்ள கிணறுகளை மூடும் பணியும் தொடங்கியது.  

மேலும் மாநாட்டிற்காக சுகாதாரக்குழுவில் 56 பேரும், மாநாட்டிற்கான போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் குழுவில் 104 பேரும் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாநாடு பந்தல் அமைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவாக மாநாடு பந்தல் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

55

மழை பாதிப்பு- விஜய்க்கு வந்த ஷாக் தகவல்

மேலும் இன்னும் ஒரு வாரத்திற்கு கன மழை பெய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதால் மாநாடு பணி இன்னமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மாநாட்டிற்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மழையின் பாதிப்பால் முழுமையான மேடை மற்றும் போலீசார் விதித்த நிபந்தனைகள் முடிக்கமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் இன்னும் பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்திற்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாதம் இறுதியில் பருவ மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விஜய்யின் அரசியல் மாநாட்டிற்கு வருண பகவான் வழிவிடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழக வெற்றி கழகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved