MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள்; விஜய் கூட்டத்தில் நடந்தது என்ன?

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள்; விஜய் கூட்டத்தில் நடந்தது என்ன?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 Min read
Raghupati R
Published : Sep 29 2025, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கரூர் துயர சம்பவம்
Image Credit : Google

கரூர் துயர சம்பவம்

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டம் பெரும் சோகமாக முடிந்தது. கூட்ட நெரிசலில் சிக்கி 17 பெண்கள், 9 குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தையும், பொதுமக்களையும் உலுக்கியிருக்கிறது.

25
விஜய் பிரச்சாரம்
Image Credit : X

விஜய் பிரச்சாரம்

விஜயின் பிரச்சாரத்துக்கு காவல் துறையினர் காலை 10.30 மணிக்கே அனுமதி வழங்கினர். ஆனால் அவர் நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதால், கரூருக்கு மாலை 7 மணி கடந்தே வந்தார். இதற்குள் மக்கள் அங்கிருந்தே காத்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரச்சாரப் பேருந்து மெதுவாகவே நகர முடிந்தது.

Related Articles

Related image1
கரூர் சம்பவம்! 29 மணி நேரத்துக்கு பின் நள்ளிரவில் ஆதவ் அர்ஜுனா போட்ட பரபரப்பு ட்வீட்!
Related image2
கரூர் கூட்ட நெரிசல்.! பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு- அதிர்ச்சியில் விஜய்
35
கரூர் கூட்ட நெரிசல்
Image Credit : Asianet News

கரூர் கூட்ட நெரிசல்

அங்கு விஜய் உரையாற்ற தொடங்கியபோது, ​​அவரது மைக்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பேச்சை கேட்க முடியாததால் மக்கள் முன்னோக்கி தள்ளியதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. சிக்கியிருந்தவர்கள் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர். மேலும் அருகிலிருந்து மரக்கிளையும் உடைந்து விழுந்ததால் பலர் காயமடைந்தனர். நிலைமை மோசமான நிலையில் இருந்தும், உரை முடிந்த பின் தான் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடங்கின.

45
பெண்கள் குழந்தைகள் பலி
Image Credit : Asianet News

பெண்கள் குழந்தைகள் பலி

உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் ஆம்புலன்ஸில் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தங்களின் அன்புக்குரியவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு கதறி அழுததால் அந்த பகுதி முழுவதும் துயரச் சுமையாய் மாறியது.

55
கரூர் சம்பவம்
Image Credit : social media

கரூர் சம்பவம்

சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட பலர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கியதாகவும் தவேக தொண்டர்கள் மீது கூடுதல் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒரே இரவில் கரூரில் நடந்த இந்த சோகச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved