MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தி.மலையில் தங்கச்சி கண்முன்னே இளம்பெண்! கதறியும் விடாத 2 காவலர்கள்! திமுகவை எகிறி அடிக்கும் இபிஎஸ்!

தி.மலையில் தங்கச்சி கண்முன்னே இளம்பெண்! கதறியும் விடாத 2 காவலர்கள்! திமுகவை எகிறி அடிக்கும் இபிஎஸ்!

Tiruvannamalai Rape Case: திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இளம்பெண்ணை, அவரது சகோதரி கண்முன்னே இரண்டு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

2 Min read
vinoth kumar
Published : Sep 30 2025, 02:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இளம்பெண் பலாத்காரம்
Image Credit : Asianet News

இளம்பெண் பலாத்காரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ஆந்திராவில் இருந்து இளம்பெண் மற்றும் அவரது சகோதரி சாமி தரிசனத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்து ஏந்தல் புறவழிச்சாலைக்கு செல்லும் போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இரண்டு காவலர்கள் இளம்பெண்களை நைசாக அழைத்து சென்று அருகில் இருந்த தோப்பில் வைத்து சகோதரி கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

24
காவலர்கள் கைது
Image Credit : Getty

காவலர்கள் கைது

பாதிக்கப்பட்ட இளம்பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Articles

Related image1
சென்னையில் அதிர்ச்சி! மனைவிக்கு தலைக்கு ஏறிய போதை! கணவனை கதறியும் விடாமல்!
Related image2
தெருக்கு தெரு டாஸ்மாக்.! இளைஞர்களை குடிகாரராக்கும் மதுவுக்கு முடிவு கட்ட சூப்பர் சான்ஸ் மக்களே! அன்புமணி!
34
எடப்பாடி பழனிசாமி
Image Credit : ADMK

எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?

44
 ஸ்டாலின் மாடல் திமுக
Image Credit : Google

ஸ்டாலின் மாடல் திமுக

இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திமுக
அரசியல்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி
மு. க. ஸ்டாலின்
குற்றம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved