MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்திலிருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து! 3 மணிநேரம் வெடித்து சிதறிய பட்டாசுகள்

தமிழகத்திலிருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து! 3 மணிநேரம் வெடித்து சிதறிய பட்டாசுகள்

சிவகாசியில் இருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றிச் சென்ற லாரி நடுவழியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சுமார் 3 மணிநேரம் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 18 2024, 07:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Ayodhya Ram mandir

Ayodhya Ram mandir

உத்தரபிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக பிரதமர் மோடி 11 நாள் விரதம் இருந்து நாடு முழுவதும் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். குறிப்பாக தமிழ்நாட்டின் ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களிலும் பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளார்.

23
Fire crackers

Fire crackers

இந்நிலையில், தமிழகத்திலிருந்து பட்டாசு ஏற்றிக் கொண்டு அயோத்தி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் கார்கி கேடா கிராம பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

33
Police investigation

Police investigation

அப்போது லாரியில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் 3 ணமிநேரமாக வெடித்து சிதறின. தீப்பிடித்த சிறிது நேரத்திலேயே லாரி முற்றிலுமாக எரிந்து நாசமானது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்வசமாக யாரும் காயமடையவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தீ விபத்து
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
60 தொகுதிகளில் செக்...அண்ணாமலையின் கொங்கு ஸ்கெட்ச்..! அலறும் அதிமுக..!
Recommended image2
டாஸ்மாக்கால் அதிகரிக்கும் கைம்பெண்கள்! அரசு மதுவை விற்றுக்கொண்டு மகளிர் தினத்தை கொண்டாடுவது சரியா! சொல்வது யார் தெரியுமா?
Recommended image3
Now Playing
ஆர்.என்.ரவி விட்டுச் சென்ற சீக்ரெட் ஃபைல்..! கவர்னர்களிலேயே ஸ்பெஷலான ஆர்.என்.ரவி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved