- Home
- Tamil Nadu News
- BJP: நயினாரை மாத்துங்க இல்லனா கட்சி அழியும்! பாஜக கூட்டணியில் நீடிப்பதா? வெளியேறுவதா? கூட்டணி கட்சி தலைவர் பரபர!
BJP: நயினாரை மாத்துங்க இல்லனா கட்சி அழியும்! பாஜக கூட்டணியில் நீடிப்பதா? வெளியேறுவதா? கூட்டணி கட்சி தலைவர் பரபர!
Thirumaran: தற்போதைய தமிழக பாஜக தலைமை ஒரு சிண்டிகேட் போல செயல்படுவதாகவும், அவர்களால் கட்சிக்கு அழிவு ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். மாநிலத் தலைமை மற்றும் அனைத்து பொறுப்பாளர்களையும் மாற்ற வேண்டும்.

பாஜக தலைமை மாற்றப்பட வேண்டும் அவரோடு தற்போது இருக்கக்கூடிய அனைவருமே மாற்றப்பட வேண்டும். இவர்கள் ஒரு சிண்டிகேட் போல் செயல்படுகிறார்கள் இவர்களால் கட்சிக்கு அழிவு தானே தவிர முன்னேற்றம் இல்லை என பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் கே.சி. திருமாறன் ஜி பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பாரதிய ஜனதா கட்சியில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நீண்ட நாளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மாண்பு இருந்தது ஒரு காலத்தில் இப்பொழுது ஒரு மண்ணும் இல்லை பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு ஜாம்பவான்கள் இருந்து இந்த கட்சி வழிநடத்தி இருக்கிறார்கள். ஆனால் இன்று இருக்கக்கூடிய பாஜக தலைமை கட்சியை வளர்ப்பதற்கோ கட்சியை முன்னேற்றுவதற்கு எந்த சிந்தனையும் இல்லை. ஒரு கூட்டணியில் அங்கம் வைக்கும் ஒரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்ற நாகரிகம் கூட தெரியாத தலைமை தான் இன்று தமிழ்நாட்டிலே பாஜக தலைமையாக இருந்து வருகிறது.
தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தேசத்தின் உன்னத தலைவன் நரேந்திர மோடிஜியின் கரத்தை வலுப்படுத்த மட்டுமே நாங்கள் இந்த கூட்டணியில் உள்ளோம் வேற எந்த ஆதாயமும் சுயநலமும் இல்லை. இதுவரைக்கும் பாரதிய ஜனதா கட்சி எங்கள் கட்சிக்கு எந்த நலனும் செய்ததும் இல்லை. அப்படி இருந்தும் நாங்கள் ஏன் இந்த கூட்டணி அங்க வைத்தோம் என்றால் இந்த தேசம் காப்பாற்றப்பட வேண்டும். தெய்வீகம் நிலைக்கப்பட வேண்டும் சனாதன தர்மம் மேலோங்க வேண்டும் இங்கே வாழக்கூடிய அனைத்து மக்களும் சந்தோசமாக ஒரு தாய் பிள்ளையாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளை எதிர்க்க வேண்டும் என்ற சித்தாந்தத்தில் தான் நாங்கள் இந்த கூட்டணியில் இருந்தோம்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியில் இருக்க கூடிய தலைமையோ அவர் எங்கிருந்து வந்தார். அவருடைய சித்தாந்தம் என்ன அவர் கையில் இந்த பாரதிய ஜனதா கட்சியை ஒப்படைத்ததன் விளைவு தான் இன்று சட்டமன்றத்திலே யாரும் வெற்றி பெற முடியாத தொகுதிகளை கேட்டு பெற்று நின்ற வேட்பாளர்கள் அனைவரையும் தோல்வி அடைவதற்கு காரணமாக இருந்தவர் தற்போதைய மாநிலம் தலைமை இவர்களை பாஜக தலைமை மாற்றவில்லை என்றால் தற்போது பாரதிய ஜனதா கட்சி 20 ஆண்டுகளை பின்தங்கி சென்று விட்டது. மேலும் கட்சி அழியாமல் இருக்க பாஜக மாநில தலைமை மட்டுமல்ல தற்போது மாநிலத்திற்கு உள்ள அனைத்து பொறுப்பாளர்களையும் அடியோடு மாற்ற வேண்டும். தேர்தல் என்று வந்துவிட்டால் இவர்கள் தான் நிக்க வேண்டும் இவர்கள் தாண்டி கட்சிக்காக உழைப்பவர்கள் யாருக்கும் எந்த சீட்டும் கொடுக்கக் கூடாது என்ற அருமையான சித்தாந்தம் கொண்டவர்கள் தான் தற்போது இருக்கக்கூடிய மாநில பொறுப்பாளர்கள் அடிப்படை தொண்டன் அடிப்படை தொண்டனாகவே இருக்க வேண்டும்.
திமுக அதிமுகவில் இருக்கும் கலாச்சாரத்தை பாஜகவில் இவர்கள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மேலும் எத்தனையோ இளைஞர்கள் எங்களை போன்றவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மீது அன்பு அக்கறையும் கொண்டிருக்கிறோம் நான் 2016 ஆண்டிலிருந்து கூட்டணி தர்மம் மாறாமல் இதே கூட்டணியில் நீடித்து வந்தேன். ஆனால் இவர்கள் என்னை ஒரு காலத்தில் மதித்ததில்லை பல்வேறு கட்சிக்கு போய் திரும்பி வந்தவர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவதும் எங்களைப் போன்ற சித்தாந்தவாதிகளை உதாசீனம் படுத்துவது தான் இவர்களுடைய வேலையாக இருக்கிறது.
தற்போது வரைக்கும் கூட்டணியில் தான் இருந்து வருகிறோம் என்னை கூட்டணியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அதாவது நானாக இந்த கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் காலத்தில் பல்வேறு இன்னல்களை கொடுத்தார்கள். பாஜக விட்டு பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு இது போன்ற செயல்கள் தான் முக்கியமான காரணம். நான் முக்குலத்தோர் சமூகத்தினுடைய பிரதிநிதியாக மட்டுமல்லாமல் அனைத்து சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவன் என்ற முறையில் அனைத்து சமுதாயத்திற்கும் நற்காரியங்களுக்கும் அவர்கள் சமூகத்திற்கான உரிமைக்காகவும் ஈடுபட்டு அவர்களுக்காக வாதாடி போராடிய ஒருவன் என்ற முறையில் தேசிய தலைமையான நரேந்திர மோடி ஜி, பி.எல்.சந்தோஷ், ஜி அமிட்சா ஜி, அவர்களுக்கு ஒரு கோரிக்கையை வைக்கின்றோம். பாஜக தலைமை மாற்றப்பட வேண்டும் அவரோடு தற்போது இருக்கக்கூடிய அனைவருமே மாற்றப்பட வேண்டும் இவர்கள் ஒரு சிண்டிகேட் போல் செயல்படுகிறார்கள் இவர்களால் கட்சிக்கு அழிவு தானே தவிர முன்னேற்றம் இல்லை.
பாஜக கட்சியின் சித்தாந்தத்தை என்னை போன்றவர்கள் கட்சியை நேசிக்கும் அடிப்படை இளைஞர்கள் பாஜகவை வளர்ப்பதற்கு உயிரை கொடுத்து ரத்தத்தை சிந்தி வளர்த்து இருக்கிறோம். எங்களுடைய வரலாறு இவர்களுக்கெல்லாம் தெரியாது நாங்கள் யார் என்பது. 1991 ஆம் ஆண்டில் இருந்து இந்து சனாதன தர்மத்திற்காக போராடிய வருகின்ற ஒருவன் நான் ஆனால் இன்று இருக்க தலைமை எங்கிருந்து எந்த சித்தாந்தத்தை ஏற்று இங்கே வந்துள்ளார் என்பதை உற்றுப் பாருங்கள் நாங்கள் கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பதை தேசிய தலைமை சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

