MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு! இதெல்லாம் ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணனும்! முக்கிய அறிவிப்பு வெளியானது!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு! இதெல்லாம் ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணனும்! முக்கிய அறிவிப்பு வெளியானது!

தமிழகம் முழுவதும் 3,935 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு இன்று நடைபெற உள்ளது. 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

2 Min read
vinoth kumar
Published : Jul 12 2025, 07:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டிஎன்பிஎஸ்சி
Image Credit : Asianet News

டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு முழுவதும் 3,935 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு இன்று 314 மையங்களில் 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR) தேர்வு இன்று நடைபெற உள்ளது. இத்தேர்வினை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதவுள்ளனர். இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

25
வீடியோ எடுக்கப்படும்
Image Credit : ANI

வீடியோ எடுக்கப்படும்

தேர்வு தொடர்பான மந்தணப் பொருட்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அரசு கருவூலங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 4,922 தேர்வுக் கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் (Videograph) செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Articles

Related image1
தந்தை இல்லாத நேரத்தில் தைலாபுரம் விசிட் அடித்த அன்புமணி! என்ன காரணம்? ராமதாஸ் ரியாக்‌ஷன் என்ன?
Related image2
மலைக்க வைக்கும் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு! எவ்வளவு கடன் இருக்கு தெரியுமா?
35
சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு
Image Credit : Asianet News

சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூட்டத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் உடல் நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

45
நுழைவுச் சீட்டு அவசியம்
Image Credit : Asianet News

நுழைவுச் சீட்டு அவசியம்

விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளான இன்று முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு காலை 09.00 மணிக்கு முன்னரே சென்று விடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். காலை 09.00 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக் கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

55
மின்னணுச் சாதனங்களுக்கு தடை
Image Credit : Asianet News

மின்னணுச் சாதனங்களுக்கு தடை

மேலும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தேர்வு
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved