- Home
- Tamil Nadu News
- மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள்!
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள்!
அரசு பொது விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

விடுமுறை என்றாலே பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்தால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் அரசு பொது விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதை அடுத்து உள்ளூர் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்.
இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் இருக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவில் சித்திரை தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வரும் ஏப்ரல் 27 திங்கட்கிழமை அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக மே 09 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அனுமதித்தும் அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் இயங்கிட ஆணையிடப்படுகிறது.
மேற்படி உள்ளூர் விடுமுறை நாள், செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான ஏப்ரல் 27 (திங்கட்கிழமை) அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது.
ஏற்கனவே 25ம் தேதி சனி, 26ம் தேதி ஞாயிறு வார விடுமுறை வருவதால் திங்கள் கிழமை உள்ளூர் விடுமுறை வருவதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

