- Home
- Tamil Nadu News
- அன்றே சொன்னேன் கேட்டாரா இபிஎஸ்? அதிமுகவின் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம்! KCP விளாசல்!
அன்றே சொன்னேன் கேட்டாரா இபிஎஸ்? அதிமுகவின் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம்! KCP விளாசல்!
Edappadi Palanisamy: தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும்பான்மை பெறாத நிலையில், அதிமுகவின் தற்போதைய நிலைக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில், திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் திணறி வருகிறார். இந்நிலையில் அன்றே நான் சொன்னதை கேட்டு அதிமுகவை ஒன்றுப்படுத்தியிருந்தால் எடப்பாடிக்கும் இந்த நிலை வந்திருக்காது என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
கே.சி.பழனிசாமி விளாசல்
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: 2024 ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கினால் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க முடியும். என்று நான் கருத்து தெரிவித்திருந்தேன். எல்லா அதிமுக தொண்டர்களும் மிகப்பெரிய வரவேற்பையும், ஆதரவையும் அதற்கு அளித்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை.
திமுகவை கூட்டணிக்கும் அழைக்கும் அதிமுக
ஆனால் இன்று எடப்பாடியால் புறக்கணிக்கப்பட்டவர்கள் திமுகவிலும், தவெகவிலும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தற்பொழுது எடப்பாடி தவெகவுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம் என்று கூவி கூவி அழைத்தார். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு திமுக எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று தற்பொழுது அவர்களிடம் மன்றாடிகொண்டிருக்கிறார்.
பாண்டிச்சேரி பழனிசாமி
கட்சியில் இருந்த எல்லோரையும் திமுகவுக்கும், தவெகவுக்கும் அனுப்பி வைத்துவிட்டு இன்றைக்கு இதுபோன்ற முயற்சிகளை எல்லாம் செய்துகொண்டிருக்கிறார் . இதற்கு அன்றே நான் சொன்னதை கேட்டு அதிமுகவை ஒன்றுப்படுத்தியிருந்தால் அதிமுகவுக்கும் எடப்பாடிக்கும் இந்த நிலை வந்திருக்காது. கூவத்தூர் பழனிசாமியாக இருந்து எடப்பாடி பழனிசாமியாக மாறியவர் தற்போது பாண்டிச்சேரி பழனிசாமியாக மீண்டும் Resort கலாச்சாரத்திற்கு சென்றிருக்கிறார்.
இப்பொழுதாவது இபிஎஸ் திருந்த வேண்டும்
தலைமை கழகத்தில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை ஒரு சிறிய அறையில் நடத்துகிற அளவு எண்ணிக்கை சுருங்கியிருக்கிறது. இப்பொழுதாவது இவர் திருந்த வேண்டும், இல்லையென்றால் தெரு ஓரங்களில் இருக்கும் கடைகளில் கூட்டம் நடத்துகிற அளவு எண்ணிக்கை சரியும். இவர் திருந்த வேண்டும் மறுத்தால் அதிமுக தொண்டர்கள் இவர்களை திருத்த வேண்டும் என ஆவேசமாக கூறியுள்ளார்.

