MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டெல்லி குண்டுவெடிப்பு.. அம்பானி, அமித்ஷா, மோடி தான் பொறுப்பு.. பொடி வைத்து பேசும் திருமா..

டெல்லி குண்டுவெடிப்பு.. அம்பானி, அமித்ஷா, மோடி தான் பொறுப்பு.. பொடி வைத்து பேசும் திருமா..

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு மோடி, அமித்ஷா, அம்பானி தான் பொறுப்பு என குற்றம் சாட்டியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களில் ஒருவர் கூட தப்பிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார்.

1 Min read
Velmurugan s
Published : Nov 11 2025, 08:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
குண்டுவெடிப்பு அதிர்ச்சி அளிக்கிறது
Image Credit : Asianet News

குண்டுவெடிப்பு அதிர்ச்சி அளிக்கிறது

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

23
மோடி, அமித்ஷா, அம்பானி கூட்டணி தானே பொறுப்பு..?
Image Credit : Asianet News

மோடி, அமித்ஷா, அம்பானி கூட்டணி தானே பொறுப்பு..?

நாட்டின் தலைநகரிலேயே, அதுவும் அதிஉயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பகுதியிலேயே காரில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு எப்படி ஊடுருவமுடிந்தது? உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள 'மோடி-அமித்ஷா-அம்பானி' கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்கவேண்டும்?

Related Articles

Related image1
சிக்னலில் நின்றிருந்த வாகனத்தில் வெடிவிபத்து, அருகே இருந்த வாகனங்கள் சேதம்: டெல்லி போலீஸ் கமிஷனர்!
Related image2
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்.. குற்றவாளிகளை உபா சட்டத்தில் தூக்கும் அதிகாரிகள்.. ஒருத்தனும் தப்பிக்க முடியாது
33
ஒரு குற்றவாளி கூட தப்பிவிடக்கூடாது
Image Credit : Asianet News

ஒரு குற்றவாளி கூட தப்பிவிடக்கூடாது

பீகார் சட்டமன்றப் பொதுத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப பதிவுக்கு முதல் நாளில் இப்படி நடந்திருப்பதால் இதனை அத்தேர்தலோடு முடிச்சுப்போட்டுப் பார்க்கும் நிலை உருவாகிறது. ஏற்கனவே இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் நடந்தேறியுள்ளன.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு விசிகசாரபில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய கொடூரப் போக்குகளை விசிக மிக வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகள் ஒருவரும் தப்பிவிடக் கூடாது. அனவரையும் கைதுசெய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொல். திருமாவளவன்
அமித் ஷா
நரேந்திர மோடி
மத்திய அரசு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved