ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. இனி இந்த 9 எக்ஸ்பிரஸ்கள் முக்கிய ரயில் நிலையங்களில் நிற்கும்
9 முக்கிய ரயில்கள் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெல்லை - பாலக்காடு - நெல்லை (வ. எண். 16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் குண்டாரா, கீழக்கடையம் ரயில் நிலையங்களில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். சென்னை எழும்பூர் - மதுரை (வ. எண். 12637) பாண்டியன் எக்ஸ்பிரஸ் மணப்பாறை ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.
சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் (வ. எண். 22661) ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மண்டபம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். நெல்லை - பாலக்காடு (வ. எண். 16791) பாலருவி எக்ஸ்பிரஸ் பாவூர்ச்சத்திரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 முதல் நின்று செல்லும்.
அடுத்து, ராமேஸ்வரம் - பனாரஸ் (வ. எண். 22535) வாராந்திர ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 முதல் நின்று செல்லும். சென்னை எழும்பூர் - நெல்லை (வ. எண். 12631) நெல்லை எக்ஸ்பிரஸ் சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். கோவை - ராமேஸ்வரம் (வ. எண். 16618) வாராந்திர ரயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.
மேலும், சென்னை எழும்பூர் - தூத்துக்குடி (வ. எண். 12693) முத்துநகர் எக்ஸ்பிரஸ் திருமங்கலம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். சென்னை எழும்பூர் - கொல்லம் - சென்னை எழும்பூர் (வ. எண். 16101/16102) கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான ரயில்கள் கூடுதல் நிறுத்தங்களில் நின்றுசெல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செய்தி அந்தந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கும், ரயில் பயணிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ரூம் எடுக்க அதிக செலவா.? குறைந்த விலையில் ஹோட்டல் வசதி! IRCTC திட்டம் தெரியுமா உங்களுக்கு?