MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்! இனி ஓடவும் முடியாது ஒளியும் முடியாது! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்! இனி ஓடவும் முடியாது ஒளியும் முடியாது! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிகளவில் பங்கேற்காமல் இருப்பதை தடுக்க, பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இனி வரும் காலங்களில் 75% வருகைப்பதிவு இல்லாத மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

1 Min read
vinoth kumar
Published : Nov 10 2025, 12:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

மாணவர்களின் எதிர்காலத்துக்கும், உயர் கல்விக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்தேர்வாக 12ம் வகுப்பு தேர்வு உள்ளது. ஏனென்றால் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி செல்வதற்கு 12ம் வகுப்பு மதிப்பெண் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் மருத்துவ படிப்பாக இருந்தாலும், பொறியியல் படிப்பாக இருந்தாலும், கலை அறிவியல் படிப்பாக இருந்தாலும் 12ம் வகுப்பு மதிப்பெண் முக்கியமானது. இந்த மதிப்பெண்ணை வைத்தே மாணவர்களின் எதிர்கால படிப்பு நிர்ணயம் செய்யப்படும்.

24
Image Credit : our own

இந்நிலையில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 12ம்பொதுத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி வருகிறார்கள். ஆனால் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளில் சிலர் இந்த தேர்வை எழுதாமல் இருப்பது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022-23-ம் கல்வியாண்டுக்கான 12ம் பொதுத் தேர்வை 8.51 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பத்திருந்த நிலையில் தமிழ் தேர்வை 50,674 பேர் எழுதாதது பள்ளிக்கல்வித்துறையை அதிர்ச்சி அடைய செய்தது. இதே நிலை தான் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Articles

Related image1
தமிழகம் முழுவதும் நாளை ஒரே நேரத்தில் 6 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை!
Related image2
இதற்காக தான் விஏஓ-வை கொ*லை செய்தோம்! சிக்கிய திருநங்கைகள் பகீர்! விசாரணையில் அம்பலம்!
34
Image Credit : Google

அதாவது இனி வரும் காலங்களில் 75% வருகைப்பதிவு இல்லாத மாணவர்கள், எவ்வித தன்னிச்சையான அனுமதியின் பேரிலும் தேர்வு எழுத முடியாது. இது, மாணவர்களிடையே பள்ளிக்கு வருவதன் அவசியத்தை உணர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகைப்பதிவை கண்காணித்து, அதன் அடிப்படையில் மட்டுமே தேர்வுக்கான அனுமதி வழங்கப்படும் என்பதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

44
Image Credit : our own

இதன் மூலம் மாணவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, கல்வியில் அதிக கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் மேம்படும் என்றும் கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்
பள்ளிகள்
தேர்வு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved