MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இதற்காக தான் விஏஓ-வை கொ*லை செய்தோம்! சிக்கிய திருநங்கைகள் பகீர்! விசாரணையில் அம்பலம்!

இதற்காக தான் விஏஓ-வை கொ*லை செய்தோம்! சிக்கிய திருநங்கைகள் பகீர்! விசாரணையில் அம்பலம்!

லஞ்ச வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாகை கிராம நிர்வாக அலுவலர் ராஜாராமன், சாலையோரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், போதையில் இருந்த அவரை இரண்டு திருநங்கைகள் கல்லால் தாக்கிக் கொலை செய்தது அம்பலமானது.

2 Min read
vinoth kumar
Published : Nov 10 2025, 09:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கிராம நிர்வாக அலுவலர்
Image Credit : Asianet News

கிராம நிர்வாக அலுவலர்

நாகை மாவட்டம் வாழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமன் (38). கிராம நிர்வாக அலுவராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2024ம் ஆண்டு பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்றதை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வசமாக சிக்கினார். இதனையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி வழக்கு விசாரணைக்காக நாகை நீதிமன்றத்தில் ஆஜாராகியுள்ளார். பின்னர் அங்கிருந்து மாலை இருசக்கர வாகனத்தில் வாழைக்கரையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ராஜாராமனை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

24
கிராம நிர்வாக அலுவலர் கைது
Image Credit : our own

கிராம நிர்வாக அலுவலர் கைது

இந்நிலையில் நேற்று காலை நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை செல்லூர் அருகே சாலையோரத்தில் தலையில் ரத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜாராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Articles

Related image1
தமிழகம் முழுவதும் நாளை ஒரே நேரத்தில் 6 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை!
Related image2
ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடா? தமிழக அரசு சொன்ன பரபரப்பு விளக்கம்
34
 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை
Image Credit : our own

தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த ராஜாராமனின் அருகில் ரத்தக்கறை படிந்த பெரிய கல் கிடந்தது. இதனால் ராஜாராமன் கல்லால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராமனை கொலை செய்தது யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

44
திருநங்கைகள் கைது
Image Credit : Asianet News

திருநங்கைகள் கைது

இந்நிலையில், ராஜாராமன் மரணத்திற்கு இரண்டு திருநங்கைகள் காரணம் என போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அன்று இரவு ராஜாராமன் அந்த பகுதியில் போதையில் படுத்திருந்த போது அங்கு வந்த செல்லுரைச் சேர்ந்த நிவேதா, ஶ்ரீகவி ஆகிய இரண்டு திருநங்கைகள் அவர் முகத்தில் கருங்கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த பணம், செல்போன், மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொலை
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல் நிலையம்
குற்றம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved