- Home
- Tamil Nadu News
- பொங்கல் பரிசு.. ரூ.3000 ரொக்கம் இதுவரை எத்தனை லட்சம் பேருக்கு வழங்கல்.. சூப்பர் அப்டேட் கொடுத்த தமிழக அரசு!
பொங்கல் பரிசு.. ரூ.3000 ரொக்கம் இதுவரை எத்தனை லட்சம் பேருக்கு வழங்கல்.. சூப்பர் அப்டேட் கொடுத்த தமிழக அரசு!
தமிழ்நாடு அரசு, 2026 தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசு ரூ.3000 ரொக்கம்
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் 2026 திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 8ம் தேதி சென்னை, பட்ரோடு நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் வழங்கி, தொடங்கி வைத்தார். மேலும், துணை முதலமைச்சர் சென்னை, சிந்தாதரிப்பேட்டை TUCS நியாய விலைகடையிலும், அந்தந்த மாவட்டத்தில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
குடும்ப அட்டைதாரர்கள்
தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 04 முதல் 07ம் தேதி வரை தொடர்புடைய நியாய விலைக்கடைப் பணியாளர்களால் வழங்கப்பட்டது.
இதுவரை 8 லட்சம் பேருக்கு வழங்கல்
இதில், முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரர்களும், இரண்டாம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. நேற்று வரை 24,924 நியாயவிலை கடைகளில் உள்ள 84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ. 2543. 23 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

