MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • புதிய சாதனை! டாஸ்மாக் வருமானத்தை ஓவர்டேக் செய்ததா பதிவுத்துறை? எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

புதிய சாதனை! டாஸ்மாக் வருமானத்தை ஓவர்டேக் செய்ததா பதிவுத்துறை? எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

Tamil Nadu Registration Department: தமிழக பத்திரப்பதிவுத்துறையில் நவம்பர் 2024ல் ரூ.1984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாத வருவாயை விட ரூ.301.87 கோடி அதிகம். டிசம்பர் 5ம் தேதி ஒரே நாளில் ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 07 2024, 09:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
TASMAC

TASMAC

தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை கொட்டிக்கொடுக்கும் துறையாக இருப்பது டாஸ்மாக்  மற்றும் பத்திரப்பதிவுதுறையாகும். குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 100 கோடிக்கு மேல் மது விற்பனையாகிறது. அதுவும் பண்டிகை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம். 200 கோடியை மிஞ்சிவிடும். 

25
Registration Department

Registration Department

அதேபோல் பத்திரப்பதிவுத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்படுகிறது. இந்நிலையில் இதுவரையில் இல்லாத வகையில் 2024 நவம்பர் மாதத்தில் ரூ.1984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 

35
Minister Moorthy

Minister Moorthy

இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிக்கையில்: தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கிவரும் பதிவுத்துறையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் 2024 நவம்பர் மாதத்தில் ரூ.1984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

45
Register Office

Register Office

இதனை கடந்த வருடம் நவம்பர் மாதம் அடைந்த வருவாயுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த நவம்பர் 2024ம் மாதத்தில் கூடுதலாக ரூ.301.87 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

55
Tamil Nadu Registration Department revenue

Tamil Nadu Registration Department revenue

மேலும் கடந்த டிசம்பர் 5ம் தேதி அன்று கார்த்திகை மாத சுப முகூர்த்தநாளில் ஆவணங்கள் அதிக அளவில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால் சிறப்பு நிகழ்வாக பொதுமக்கள் பயன் பெறும் வகையில் முன்பதிவு வில்லைகள் 100 லிருந்து 150 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி பொதுமக்கள் உயர்த்தப்பட்ட முன் ஆவணப்பதிவு வில்லைகளை பயன்படுத்தி கடந்த டிசம்பர் 5ம் தேதி அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக் கடை

Latest Videos
Recommended Stories
Recommended image1
மழை வருமா? வெயில் சுட்டெரிக்கப் போகுதா? வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்
Recommended image2
அப்ப நைனார் சொல்லும் போது குதிச்சிங்க! விஜயின் மனைவி சங்கீதா குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?
Recommended image3
Now Playing
ஒபிஎஸ் தி.மு.க. கூட்டணியில் இணைந்து இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved