MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய தமிழக அரசு! ரூ.1137 கோடி ஒதுக்கி அசத்தல்

ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய தமிழக அரசு! ரூ.1137 கோடி ஒதுக்கி அசத்தல்

தமிழகத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுகாக வழங்கப்பட வேண்டிய ரூ.1137 கோடியை ஒதுக்கீடு செய்த முதல்வர் ஸ்டாலின் அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

1 Min read
Velmurugan s
Published : Aug 20 2025, 07:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பணப்பலன்
Image Credit : F/mk stalin

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பணப்பலன்

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெறும் பட்சத்தில், பிற அரசுத்துறை ஊழியர்களைப் போன்று ஓய்வு பெறக்கூடிய நாளில் பணப்பலன் வழங்கப்படுவது கிடையாது. அந்த வகையில், போக்குவரத்துக் கழகங்களில் பணி செய்து கடந்த 2023ம் ஆண்டு ஜூலை முதல் ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன் தற்போது வரை வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து சிஐடியு சார்பாக நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

23
அரசாணை வெளியீடு
Image Credit : ANI

அரசாணை வெளியீடு

போராட்டத்தின் தொடர்ச்சியாக பணப்பலன் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை செயலர் சுன்சோங்கம் ஜடக்சிரு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “போக்குவரத்துக் கழகங்களில் 2023ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்பாண்டு ஜனவரி வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணி காலத்தில் உயிரிழந்தவர்களுக்கும் பணப்பலன் வழங்கும் வகையில் நிதி உதவி கோரி போக்குவரத்துத் துறை தலைவர் கடிதம் அனுப்பி இருந்தார்.

Related Articles

Related image1
இந்தியா கூட்டணி தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
Related image2
அவமதித்து மிரட்டுவதை ஏற்க முடியாது! மன்னிப்பு கேளுங்கள்! இல்லனா போராட்டம் தான்! EPSக்கு எதிராக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம்!
33
ரூ.1137 கோடி ஒதுக்கீடு
Image Credit : Asianet News

ரூ.1137 கோடி ஒதுக்கீடு

இதனைப் பரிசீலித்த அரசு, ரூ.1137.97 கோடியை தற்காலிக முன்பணமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கி ஆணையிடுகிறது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved