MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விவசாயிகளுக்கு கொண்டாட்டம்.! பருத்தியை கொண்டு வாங்க.! பணத்தை அள்ளிட்டு போங்க- தமிழக அரசு அதிரடி

விவசாயிகளுக்கு கொண்டாட்டம்.! பருத்தியை கொண்டு வாங்க.! பணத்தை அள்ளிட்டு போங்க- தமிழக அரசு அதிரடி

தமிழக அரசு பருத்தி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுவதால், விவசாயிகள் பருத்தியை உலர்த்தி, தரம் பிரித்து விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும்.

2 Min read
Ajmal Khan
Published : Jun 28 2025, 07:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக விவசாயிகளு நலன்
Image Credit : Google

தமிழக விவசாயிகளு நலன்

விவசாயம் தான் ஒரு நாட்டின் முன்னேற்றப்பாதைக்கு அடித்தளமாக உள்ளது. அந்த வகையில் இயற்கை பேரிடர், தண்ணீர் பற்றாக்குறை, விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இது மட்டுமில்லாமல் விற்பனை செய்யும் பொருட்களுக்கும் உரிய விலை கிடைக்காமல் பரிதவித்து வருகிறார்கள். 

இந்த நிலையில் பருத்தி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, தமிழ்நாட்டில் பருத்தி சராசரியாக 3.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு 52,700 மெட்ரிக் டன் பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. 2024-25 ஆண்டில், மூன்றாவது முன்மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டில் 2.55 இலட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு 36,000 மெட்ரிக்டன் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

24
பருத்தி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Image Credit : google

பருத்தி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இதில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் நெல் தரிசில் பருத்தி 54.700 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு 7,700 மெட்ரிக்டன் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆர்சிஎச் 659 பிஜி || ஆர்சிஎச் 386 பிஜி II, சூப்பர்காட் 115 பிஜி II, போன்ற பருத்தி இரகங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டன. நடப்பு ஆண்டில் 4.4 இலட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களிலுள்ள 17 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 14,115 விவசாயிகள் மற்றும் 26 வர்த்தகர்கள் பருத்தி பரிவர்த்தனை செய்திட பதிவு செய்துள்ளனர். இதுவரை, 9 கோடி ரூபாய் மதிப்பிலான 1,511 மெட்ரிக் டன் பருத்தி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பருத்தியின் தரத்திற்கேற்ப குவிண்டால் ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ.7,700. குறைந்தபட்ச விலையாக ரூ.4.111, சராசரி விலையாக ரூ.5,850 என்ற அளவில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் குவிய சூப்பர் வாய்ப்பு.! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Related image2
ரொம்ப கம்மி வட்டியில் 15 லட்சம் ரூபாய் வரை குழு கடன்- மகளிர் சுய உதவிக்குழுவிற்கு அடித்த ஜாக்பாட்
34
பருத்தி கொள்முதல்
Image Credit : google

பருத்தி கொள்முதல்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தொடர்ந்து பருத்தி பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இயல்பாக பருத்தியின் தரத்திற்கேற்ப ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகளால் மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக (e-NAM), மறைமுக ஏலமுறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1.976 மெட்ரிக் டன் பருத்தி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. 

பருத்தியின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுவதால் பருத்தியின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளான ஈரப்பதம் (Moisture), இழை நீளம் (staple length). இழையின் நுண்மைத்தன்மை (Micronaire), முதிர்ச்சி மற்றும் நீண்ட இழை தரக்கூடிய பருத்தி இரகங்கள் குறித்து வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய பருத்தி வாரியமும் தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

44
பருத்தி விவசாயிகளுக்கு லாபகரமான விலை
Image Credit : social

பருத்தி விவசாயிகளுக்கு லாபகரமான விலை

விவசாயிகள் பருத்தியில் இலாபகரமான விலைபெற பருத்தியைத் உலர்த்தி, தரம்பிரித்து அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மாநில அலுவலர்கள் டெல்டா மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டு, விவசாயிகள் மற்றும். வியாபாரிகளுடன் கூட்டங்கள் நடத்தி, பருத்திக்கு இலாபகரமான விலை கிடைக்கச்செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு பருத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
விவசாயக் கடன்
விவசாயம்
தமிழ்நாடு அரசு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved