MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தஞ்சாவூரில் முதலை பண்ணை.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூரில் முதலை பண்ணை.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சட்டப்பேரவையில் சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணை அமைக்கும் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்தார். தஞ்சாவூர் அருகே பண்ணை இருப்பதால், சிதம்பரத்தில் வாய்ப்பில்லை என்றார். மேலும், வனத்துறை சாலைகள் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Apr 09 2025, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Thanjavur crocodile farm : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று இதற்கு முன்னதாக நடைபெற்ற  கேள்வி நேரத்தின் போது, சிதம்பரம் கே.ஏ.பாண்டியன், சிதம்பரம் பழைய கொள்ளிடம் ஆற்று பகுதியில் முதலை பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா.? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதால் கிராம்ப்பகுதிக்குள் புகுந்து கால்நடைகளை பிடித்து சாப்பிடுவதாக தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, சிதம்பரம் தொகுதி பழை கொள்ளிடம் அருகே முதலைப்பண்ணை அமைக்க எந்த வித திட்டமும் இல்லை,

24
Chidambaram crocodile farm

Chidambaram crocodile farm

தஞ்சாவூரில் முதலை பண்ணை

தஞ்சாவூர் மாவட்டம் அனைக்கரை பகுதியில் முதலகைகள் பாதுகாப்பு மையம் அமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 35 லட்சம் ரூபாய் ஒதுக்கி அரசாணை வெறியிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பகுதியில் முதலை பண்ணை அமைக்கப்பட உள்ளது. அதற்கு அருகில் தான் சிதம்பரம் பகுதி உள்ளதால் முதலை பண்ணை அமைக்க வாய்ப்பில்லை என்று பதில் அளித்தார். 

தமிழ்நாட்டில் 3 இடங்களில் முதலை பண்ணைகள் உள்ளது. கோடை காலத்தில் ஆழமான பகுதிகளில் சென்று தங்கி விடுகிறது. அணைக்கரை பகுதிகளில் முதலை பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. முதலையால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு 25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.  

34
FOREST ROAD IN TAMILNADU

FOREST ROAD IN TAMILNADU

வனப்பகுதியில் சாலை

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, சிதம்பரம் பாண்டியன், சிதம்பரம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 20 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. மீனவ கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலைகளை ஏற்படுத்த வனத்துறை அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, வனத்துறைக்கு சொந்தமான பழுதடைந்த சாலைகளை சீரமைக்க 500 எக்டேருக்கு 250 கோடி நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது. 

44
Forest road repair

Forest road repair

புதிய சாலைகள் அமைக்கப்படும்

இதில் புதிய சாலைகள் அமைப்பது மற்றும் பழைய சாலைகள் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே, வனத்துறை நிலங்களில் புதிய சாலை அமைப்பது குறித்து மனு அளித்தால் பரிசீலனை செய்து புதிய சாலைகள் அமைத்து தரப்படும் என்று அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடு அரசு
உலக வன நாள்
தமிழ்நாட்டில் முதலைப் பண்ணை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
நம் முதல்வர் முயற்சியால் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும் ! டி.ஆர்.பி.ராஜா பேட்டி
Recommended image2
Now Playing
ரஜினியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கிக் கொள்ள வேண்டும் ! ஜினி ரசிகர்கள் ஆவேச பேட்டி
Recommended image3
Now Playing
திரைப்பட நடிகரான யோகி பாபு இன்று ஆலயத்திற்கு வருகை தந்து சனீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்தார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved