- Home
- Tamil Nadu News
- தசரா திருவிழாவிற்கு ஊருக்கு போறீங்களா? போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தசரா திருவிழாவிற்கு ஊருக்கு போறீங்களா? போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் தசரா திருவிழாவிற்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

வீஷேச நாட்களில் சிறப்பு பேருந்து
தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு என முக்கிய விஷேச நாட்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இது மட்டுமில்லாமல் வேளாங்கண்ணி கோயில் திருவிழா, தஞ்சை கோயில் திருவிழா, நாகூர் தர்ஹா சந்தனக்கூடு போன்ற நாட்களிலும் சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள தசரா திருவிழாவிற்கான சிறப்பு பேருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தசரா கோயில் திருவிழா
வட மாநிலங்களில் தீபாவளி கொண்டாட்டத்தை போன்று தசரா விழாவும் சிறப்பு வாய்ந்ததாகும். நவராத்திரி காலத்தில் 9 நாட்கள் இந்த விழாவானது கொண்டாடப்படும். அந்த வகையில் தமிழகத்தில் தசரா பண்டிகை கொண்டாடப்படும் ஒரே கோவில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
இந்த விழாவையொட்டி முக்கிய அம்சமாக வரும் அக்டோபர் 12ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும். இதனை பார்ப்பதற்காக பல ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகர பட்டினத்தில் குவிவார்கள். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில்
tamilnadu bus
குலசேகரபட்டிணத்திற்கு சிறப்பு பேருந்து
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டிணத்தில் நடைபெறவுள்ள தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை சென்னையிலிருந்து திருச்செந்தூர். குலசேகரப்பட்டிணத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டிணத்திற்கும் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
koyambedu
சென்னை, கோவையில் இருந்து சிறப்பு பேருந்து
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டிணத்தில் நடைபெறவுள்ள தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை சென்னையிலிருந்து திருச்செந்தூர். குலசேகரப்பட்டிணத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டிணத்திற்கும் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.