MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சுயநலத்தோடு இருக்கும் எடப்பாடி பழனிசாமி திருந்தலனா! இது தான் நடக்கும்! டிடிவி.தினகரன்!

சுயநலத்தோடு இருக்கும் எடப்பாடி பழனிசாமி திருந்தலனா! இது தான் நடக்கும்! டிடிவி.தினகரன்!

எம்ஜிஆர் நினைவு நாளில் தினகரன் அஞ்சலி செலுத்தினார். திமுக ஆட்சி மீது மக்கள் கோபத்தில் இருப்பதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினார்.

1 Min read
vinoth kumar
Published : Dec 24 2024, 01:26 PM IST| Updated : Dec 24 2024, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
37th Anniversary of MGR

37th Anniversary of MGR

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 37வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

24
TTV Dhinakaran

TTV Dhinakaran

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: தமிழ்நாட்டு மக்கள் திமுக ஆட்சி மீது கோபத்தில் இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியாக அமையும். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்பது முதலமைச்சரின் கனவாக இருக்கலாம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நாளொரு மேனியாக, பொழுதொரு மேனியாக பலவீனம் ஆகி வருகிறது. 

இதையும் படிங்க: இறுமாப்புடன் பேசி தீர்மானம் போடுபவர்களை தீர்மானமாக மக்களும் ஏமாற்றுவார்கள்! திமுகவை சீண்டும் தமிழிசை!

34
Edappadi Palanisamy

Edappadi Palanisamy

பழனிச்சாமிடம் இரட்டை இலை இருக்கிறது என்பதற்காக தங்களை ஏமாற்றிக் கொள்ளாமல் அதிமுக தொண்டர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என நான் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். என்னுடைய கருத்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். ஜெயலலிதாவின்  தொண்டர்கள் இணைந்து அந்த ஆட்சியை உருவாக்குவோம். 

44
TTV Dhinakaran Vs Edappadi Palanisamy

TTV Dhinakaran Vs Edappadi Palanisamy

டெல்லி சென்றது என்னுடைய தனிப்பட்ட பயணம். ஆனால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே திமுகவை வீட்டுக்கு அனுப்ப முடியும். திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என எம்ஜிஆர் கூறுவார்.  சுயநலத்தில் இருக்கும் பழனிச்சாமி ஒன்று திருந்த வேண்டும் இல்லையென்றால் திருத்தப்படுவார். அம்பேத்கர் குறித்து தனது கருத்து தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அதிமுக
பிஜேபி
எடப்பாடி பழனிசாமி
டிடிவி தினகரன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved