MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தென்காசியில் கனமழை காரணமாக அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறைக்கு ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Nov 22 2024, 08:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்த நிலையில், வடகிழக்கு பருவமழையும் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வந்தது. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு முதல் விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

25

இதனையடுத்து தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்தார். இருப்பினும் சில பள்ளிகளில் 10, 12-ம் வகுப்புகள் பெற்றது. இதுகுறித்து ஆட்சியருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, ஆட்சியரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவசரமாக அந்த பள்ளிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

35

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாகும் என அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

45

இந்நிலையில் நாளை பள்ளிகள் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை வாக்காளர் முகாம் (சேர்க்கை, நீக்கம் மற்றும் சரிபார்ப்பு) நடைபெறுவதால் நவம்பர் 23ம் தேதி பள்ளி வேலை நாள் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 

55

அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 30ம் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளி முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து வகையான பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தென்காசி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம் ! திருமாவளவன் பேட்டி
Recommended image2
மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. இபிஎஸ் பக்கம் சாய்ந்த வெல்லமண்டி நடராஜன்!
Recommended image3
சங்கீதா முடிவின் பின்னணியில் அரசியல் சதி?.. விஜய்யை முடக்கும் 'மெகா' கட்சி?.. தவெகவினர் புலம்பல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved