MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ரூ.12,50,00,000 ஒதுக்கீடு செய்த பள்ளிக்கல்வி துறை! எதற்காக தெரியுமா?

பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ரூ.12,50,00,000 ஒதுக்கீடு செய்த பள்ளிக்கல்வி துறை! எதற்காக தெரியுமா?

Schooதமிழக அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது. 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான குறுவட்டம், வருவாய் மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்த ரூ.12.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Oct 30 2024, 08:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழக அரசு கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமல்லாமல் பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களின் பசியை போக்கும் வகையில் காலை மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் பயமடைந்து வருகின்றனர். 

24

மேலும் இலவச பேருந்து பயண அட்டை, இலவச சீருடை, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதை போன்று விளையாட்டிலும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: TN Government Employees: ஒரே நேரத்தில் 3 சம்பளங்கள்! அரசு ஊழியர்களை திக்கு முக்காட வைக்கும் தமிழக அரசு!

34

குறிப்பாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 2024 - 2025ம் ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிக்கான தேதியை அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை தரப்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: Special Train: நாளை தீபாவளி பண்டிகை! சொந்த ஊர் செல்லும் பொதுமக்களுக்க ரயில்வே துறை வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

44

அதில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் அனைத்து வகையான அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளை பல்வேறு நிலைகளில் ஊக்கப்படுத்தும் விதத்தில், 2024-2025-ஆம் கல்வியாண்டில், குறுவட்டம், வருவாய் மாவட்டம், மாநில மற்றும் இந்திய பள்ளிக் குழுமம் (SGFI) சார்பாக நடைபெறும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு மண்டல மற்றும் மாநில அளவில் தெரிவுப் போட்டிகள் நடத்திடவும், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறவும், மேலும் இந்திய பள்ளிக் குழுமம் (SGFI) போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திடவும் உரிய செலவினங்கள் மேற்கொள்ள ரூ.12,50,00,000/- நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved