MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரயிலில் மிடில் பெர்த் பயணமா.? இதை கண்டிப்பாக பன்னுங்க- ரயில்வே துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ரயிலில் மிடில் பெர்த் பயணமா.? இதை கண்டிப்பாக பன்னுங்க- ரயில்வே துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சென்னை-பாலக்காடு விரைவு ரயிலில் பயணித்த பெண் மீது மிடில் பெர்த் விழுந்து விபத்து. ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி விளக்கம் அளித்துள்ளது.

2 Min read
Ajmal Khan
Published : May 13 2025, 02:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரயில் பயணத்தில் விபத்து
Image Credit : Google

ரயில் பயணத்தில் விபத்து

கோடை விடுமுறை காரணமாக பொதுமக்கள் சுற்றுலாவிற்கும், வெளியூருக்கும் அதிகமாக பயணம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் பாதுகாப்பான பயணமாக முதல் தேர்வாக ரயில் பயணமே உள்ளது. இந்த நிலையில் ரயிலில் பயணம் செய்த பெண் பயணி மீது மிடில் பெர்த் விழுந்ததில் ரத்தம் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை-பாலக்காடு விரைவு ரயிலில் மிடில் பெர்த் சரிந்து விழுந்ததில் கீழ் பெர்த்தில் படுத்திருந்த சூர்யா என்ற பெண் காயமடைந்தார். ரயிலில் நடு பெர்த்தில் படுத்திருந்த நபர் பாத்ரூம் செல்வதற்காக கீழே இறங்கியபோது சங்கிலி நழுவி கீழ் பெர்த்தில் படுத்திருந்த பெண் மீது விழுந்துள்ளது.

26
ரயிலில் மிடில் பெர்த் விழுந்து பெண் காயம்
Image Credit : Asianet News

ரயிலில் மிடில் பெர்த் விழுந்து பெண் காயம்

இதில் ரத்தம் சொட்டச் சொட்ட பெண் பயணி சூர்யா பயணம் செய்துள்ளார். இரயிலில் முதல் உதவி சிகிச்சை கூட செய்யாமல் பாளையம் முதல் சேலம் வரை சுமார் 2 மணி நேரமாக தலையில் கை வைத்துப் படியே இரத்தம் வராமல் பிடித்துக் கொண்டே வந்தார். மேலும் ரயிலில் முதலுதவிப்பெட்டிக்கூட இல்லையென குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 

தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், ரயில் எண் 22651 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் 12.05.2025 அன்று பெட்டி S5 இல் 2 வது பெர்த்தில் இருந்த பயணிக்கு நடு பெர்த் விழுந்ததால் காயம் ஏற்பட்டது.

Related Articles

Related image1
Hydrogen Train : இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் மே மாதம் அறிமுகம்
Related image2
Now Playing
Hyperloop Train in India | இந்தியாவின் முதல் ஹைப்பர் லூப் ரயில்! மணிக்கு 1,100 கிமீ வேகம்!
36
பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை
Image Credit : Asianet News

பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை

சம்பவம் நடந்த நேரத்தில், நடு பெர்த்தில் ஆட்கள் இல்லை. ரயில் ஜோலார்பேட்டை நிலையத்தை கடந்த பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த இடத்தில் அருகிலுள்ள ரயில் நிலையம் மொரப்பூர் ஆகும். தகவல் கிடைத்ததும், வணிக மற்றும் மருத்துவக் கட்டுப்பாடுகளால் உடனடியாக மருத்துவ உதவி ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், மருத்துவ உதவி பெறுவதற்காக மொரப்பூரில் ரயிலில் இருந்து இறங்க அந்தப் பயணி மறுத்துவிட்டார். பின்னர் சேலம் ரயில் நிலையத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, 

46
ஆய்வுக்குட்பட்ட ரயில் பெட்டி
Image Credit : Google

ஆய்வுக்குட்பட்ட ரயில் பெட்டி

அங்கு நிலையத்தில் அவசர மருத்துவ உதவி வழங்கப்பட்டது. நிலைய அதிகாரியால் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் பயணி மேலதிக சிகிச்சைக்காக மதியம் 3.05 மணிக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ரயில் பெட்டி S5 RPF. என்ஜினியர்ஸ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளால் கூட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், ரயில் பெட்டியின் சங்கிலி போல்ட் இறுக்கமான நிலையில் இருப்பதும், நடுத்தர ரயில் பெட்டி 2.5 செ.மீ.க்கு மேல் உயர்த்தப்பட்டபோது மட்டுமே கொக்கி விடுபட்டதும் கண்டறியப்பட்டது, .

56
விபத்திற்கு காரணம் என்ன.?
Image Credit : Asianet News

விபத்திற்கு காரணம் என்ன.?

இது நிலையான விவரக்குறிப்புகளுடன் ஒத்துப்போகிறது. மேலும், ரயில் எண்.22651 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் 12.05.2025 அன்று புறப்படுவதற்கு முன்பு, ரயில் பெட்டிகளின் முழுமையான ஆய்வு சம்பந்தப்பட்ட முதன்மை பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு, தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம், பயணி, சங்கிலி இணைப்பு கொக்கியை சரியாகக் கையாளாததால் ஏற்பட்டதாகத் தெரிகிறது, இது நடு பெர்த்திற்கான முக்கிய லாக் செய்யும் முறையாகும். 

66
பயணிகளுக்கு ரயில்வே துறை அறிவுறுத்தல்
Image Credit : 4045@freepik

பயணிகளுக்கு ரயில்வே துறை அறிவுறுத்தல்

எனவே ரயலில் பயணம் செய்யும் பயணிகள் சங்கிலி இணைப்பு கொக்கியைப் பயன்படுத்தி நடு பெர்த் சரியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதா ?என்பதை பயணிகள் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற கையாளுதல் அல்லது பெர்த்தை சரியாகப் பூட்டத் தவறியது சக பயணிகளுக்கு பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்ய, இந்தப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதில் உங்கள் ஒத்துழைப்பு அவசியம் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved