MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மோடிக்கு எதிராக திரும்பிய ஓபிஎஸ்..! மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை

மோடிக்கு எதிராக திரும்பிய ஓபிஎஸ்..! மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை

தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்காமல் இருப்பது கல்வி உரிமைச் சட்டம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Velmurugan s
| Updated : Jul 29 2025, 10:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தேசிய கல்வி கொள்கையில் இணையாத தமிழக அரசு
Image Credit : Google

தேசிய கல்வி கொள்கையில் இணையாத தமிழக அரசு

மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக் கொள்கையில் தமிழக அரசு தற்போது வரை இணையாத நிலையில் தமிழகத்திற்கான கல்வி நிதியினை ஒதுக்கீடு செய்யாமல் மத்திய அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது. இதனிடையே தமிழகத்திற்கான கல்வி நிதியை உடனடியாக வழங்குமாறு தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், எம்பி கனிமொழி உள்ளிட்டோ மத்திய அமைச்சர் தமேந்திர பிரதானை நேற்று டெல்லியில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

24
ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
Image Credit : our own

ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் சமூக வலைதளப் பக்கத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024 - 25 நிதியாண்டுக்கான சம்கரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திறி்கு அளிக்க வேண்டிய ரூ.2151 கோடியை நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இந்த நிதியை நம்பி கிட்டத்தட்ட 65 லட்சம் மாணவ, மாணவியர் தனியார் பள்ளிகளில் கல்வி பெற்று வருவதோடு, 6 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, பள்ளிகிளல் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடிங்கியுள்ளன.

Related Articles

Related image1
நள்ளிரவில் பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி! OPS, TTVக்கு கூட்டணியில் கெட்அவுட்?
Related image2
OPS, TTV விவகாரம்! எனக்கே ஆர்டர் போடுறியா? EPSன் நிபந்தனைகளால் டென்ஷனான பிரதமர் மோடி?
34
மாணவர்கள் பாதிப்பு
Image Credit : our own

மாணவர்கள் பாதிப்பு

மேலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 25 விழுக்காடு மாணவ, மாணவியரை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசின் நிபந்தனையை மாநில அரசு ஏற்காதது என்பது மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்சினை. இந்த காரணத்தைச் சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்கு உரியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திறகும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது.

44
கல்வி நிதியை உடனடியாக விடுவியுங்கள்
Image Credit : our own

கல்வி நிதியை உடனடியாக விடுவியுங்கள்

சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியை விடுவிக்காதது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஏழையெளிய மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டுக்கான 2151 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கோரியதாகவும், ஆனால் அவரை சந்திப்பதை பிரதமர் மோடி தவிர்த்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் கண்டன அறிக்கை கவனம் பெற்றுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓ. பன்னீர்செல்வம் - அதிமுக
பிஜேபி
மத்திய அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
நள்ளிரவில் பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி! OPS, TTVக்கு கூட்டணியில் கெட்அவுட்?
Recommended image2
OPS, TTV விவகாரம்! எனக்கே ஆர்டர் போடுறியா? EPSன் நிபந்தனைகளால் டென்ஷனான பிரதமர் மோடி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved