MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா நீக்கமா? திருமாவளவன் சொன்ன பரபரப்பு தகவல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா நீக்கமா? திருமாவளவன் சொன்ன பரபரப்பு தகவல்!

Aadhav Arjuna vs Thirumavalavan: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவை கடுமையாக விமர்சித்து, தமிழகத்தில் மன்னராட்சி நடப்பதாகவும், பிறப்பால் முதலமைச்சர் உருவாகக் கூடாது என்றும் கூறியுள்ளார்.  

1 Min read
Author : vinoth kumar
| Updated : Dec 07 2024, 08:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Aadhav Arjuna

Aadhav Arjuna

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பதிலாக அக்கட்சியை சேர்ந்த துணைபொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார். விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா பேச்சு தான் தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. அப்படி என்ன பேசினார் என்பதை பார்ப்போம். 

25
Aadhav Arjuna

Aadhav Arjuna

தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை. 2026 தேர்தலில் தமிழகத்தில் மன்னராட்சியை ஒழிக்க  வேண்டும். தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. மன்னராட்சியை எதிர்த்தால் சங்கி என்று சொல்கிறார்கள். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது. கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும் என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த விஷயம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

35
Aadhav Arjuna

Aadhav Arjuna

ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரை கட்சியில் இருந்து நீக்கம் வேண்டும் என திமுகவினர் கூறிவருகின்றனர். இதனால் திருமாவளவனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை பாயுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

45
Aadhav Arjuna

Aadhav Arjuna

இந்நிலையில் சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மேலிடப்பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில், திருமாவளவன்,  துணை பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார் எம்பி, சிந்தனை செல்வன், வன்னியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், இதில் ஆதவ் அர்ஜூனா பங்கேற்கவில்லை. 

55
Thirumavalavan

Thirumavalavan

இந்த கூட்டத்துக்கு பிறகு திருமாவளவனிடம் ஆதவ் அர்ஜுனா மீதான நடவடிக்கை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசிக-வில் இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை. நிர்வாகிகள் பலருடன் பேச வேண்டி இருப்பதாகவும் அதன் பின்னரே முடிவு செய்யப்படும் என்றார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொல். திருமாவளவன்
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
Recommended image2
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!
Recommended image3
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved