MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எதுக்கு இந்த முடிவை எடுத்தார் தெரியல! ஓபிஎஸ் ஓகே சொன்னால்! இதை செய்ய நான் ரெடி! நயினார் நாகேந்திரன்!

எதுக்கு இந்த முடிவை எடுத்தார் தெரியல! ஓபிஎஸ் ஓகே சொன்னால்! இதை செய்ய நான் ரெடி! நயினார் நாகேந்திரன்!

பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஓபிஎஸ் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது.

1 Min read
vinoth kumar
Published : Aug 01 2025, 04:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

அரசியல் நிரந்தர நண்பரும் இல்ல, எதிரியும் இல்லை என்பார்கள். அதற்கு ஏற்றார் போல தர்மயுத்தம் நடத்தியதே பாஜக சொல்லி தான் நடத்தியதாக ஓபிஎஸ் கூறியது மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு அளிக்கக் கோரி ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில், கடைசி வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் பாஜக தரப்பில் தனக்கான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று ஓபிஎஸ் உணர்ந்தார்.

24
Image Credit : x/ mk stalin

மேலும் தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் வெளியேற வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருந்தார். இந்நிலையில் திடீரென யாரும் எதிர்பாராத விதமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு தமிழக அரசியல் அரங்கை அதிர விட்டார். அதுமட்டுமல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய கையோடு முதல்வர் மு.க.ஸ்டாலினை அடுத்தடுத்து மூன்று முறை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் திமுக கூட்டணி அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி பாஜகவை அதிர்ச்சி அடைய செய்தது.

Related Articles

Related image1
தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் எடாகூடமாக மழை கொட்டித்தீர்க்க போகுதாம்! வானிலை மையம் எச்சரிக்கை!
Related image2
பள்ளிக்கல்வி அமைச்சரின் தொகுதியில் அதிர்ச்சி! மாணவனின் உயிரிழப்பை மூடி மறைக்க முயற்சி! அன்புமணி பகீர்!
34
Image Credit : Asianet News

இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். தொலைபேசியில் பேசிய நிலையிலும் வெளியேறும் முடிவை ஓபிஎஸ் எடுத்துள்ளார். ஓபிஎஸ் வெளியேறியது சொந்தப் பிரச்சனையா அல்லது வேறு காரணமா என தெரியவில்லை. கூட்டணியில் இருந்து விலகியது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். அவர் என்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க நான் ஏற்பாடு செய்திருப்பேன்.

44
Image Credit : x/ mk stalin

தொகுதிப் பிரச்னைக்காக ஓ.பன்னீர் செல்வம், முதலமைச்சரை சந்தித்திருக்கலாம். ஒரு எம்.எல்.ஏ ஆக நானே முதலமைச்சரை சந்திக்க முடியும். ஓபிஎஸ் கேட்டுக்கொண்டால் வரும் 26ம் தேதி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
நயினார் நாகேந்திரன்
பிஜேபி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved