MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருவண்ணாமலை மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்.! இளைஞர்களுக்கு கொத்தாக வரப்போகிறது வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்.! இளைஞர்களுக்கு கொத்தாக வரப்போகிறது வேலைவாய்ப்பு

தமிழக அரசு, ஐடி நிறுவனங்களை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில், திருவண்ணாமலையில் புதிய மினி டைடல் பூங்காவை அமைக்கிறது. இந்த 4 தளங்கள் கொண்ட டைடல் பூங்கா, இளைஞர்களுக்கு சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பை வழங்கும்.

2 Min read
Ajmal Khan
Published : Apr 21 2025, 12:28 PM IST| Updated : Apr 21 2025, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

New IT Park in Tiruvannamalai! Tender announcement தொழில் துறையின் வளர்ச்சியானது நாளுக்கு நாள் அசூர வளர்ச்சியை பெற்று வருகிறது. அந்த வகையில், கணினி காலம் மாறி ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  நவீன காலத்திற்கு ஏற்ப தொழில் துறையும் மாற்றங்களை சந்தித்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் முதன் முதலில் தொடங்கப்பட்ட டைடல் பார்க்கின் மூலம் இன்று பல லட்சம்  இளைஞர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். தற்போது ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில்,

24
Tidal park in Tamilnadu

Tidal park in Tamilnadu

இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா

ஐடி நிறுவனங்களை ஒரு இடத்தில் குவியாமல் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மேம்படுத்தும் வகையில் மினி டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய நகரங்களில் மினி டைட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.  மதுரையில் மாட்டுத்தாவணி பகுதியிலும், திருச்சியிலும் பிரமாண்டமாக டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது.

34
Tiruvannamalai tidal park

Tiruvannamalai tidal park

கரூர், திருவண்ணாமலை டைடல் பூங்கா

இதே போல கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில்  புதிய மினி டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு நடைபெற்ற தொழிற்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்திருந்தார். இதற்காக 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.  இதனை தொடர்ந்து திருவண்ணாமலையில் டைடல் பூங்கா அமைக்க  முதற்கட்ட பணிகளான திட்ட மேலாண்மை, வரைபடத் தயாரிப்பு என பணிகள் தொடங்கி நடைபெற்றது.

44
it jobs in tiruvannamala

it jobs in tiruvannamala

திருவண்ணாமலை டைடல் பூங்கா- டெண்டர் கோரிய அரசு

இதனை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக  மினி டைடல் பூங்கா அமைக்க முக்கியமான கட்டமான கட்டடம் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.  4 தளங்களுடன் அமைக்கப்பட உள்ள இந்த டைடல் பூங்கா இன்னும் ஓராண்டில் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலையில் அமைக்கப்படவுள்ள டைடல் பூங்காவின் மூலம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு தங்களது சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
திருவண்ணாமலை
வேலை வாய்ப்பு
தனியார் வேலை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved