MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரே ஆண்டில் 7வது முறை நிரம்பிய மேட்டூர் அணை! டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!

ஒரே ஆண்டில் 7வது முறை நிரம்பிய மேட்டூர் அணை! டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் ஏழாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 Min read
SG Balan
Published : Oct 20 2025, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வடகிழக்கு பருவமழை
Image Credit : our own

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதேபோல், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

24
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
Image Credit : our own

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதன் விளைவாக, மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுவது இது ஏழாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Related image1
ஒரே ஆண்டில் 5வது முறை நிரம்பிய மேட்டூர் அணை! வெள்ள அபாய எச்சரிக்கை... விவசாயிகள் மகிழ்ச்சி!
Related image2
மேட்டூர் அணை 68 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது! விவசாயிகள் மகிழ்ச்சி!
34
காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி
Image Credit : google

காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

இன்று காலை நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு 14,420 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியிருப்பது டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

44
கனமழைக்கு வாய்ப்பு
Image Credit : our own

கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வட கடலோர மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள்மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தமிழ்நாடு
விவசாயம்
மழை செய்திகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved