MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை; சென்னை மக்களே உஷார்; தேதி குறித்த வானிலை ஆய்வாளர்கள்!

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை; சென்னை மக்களே உஷார்; தேதி குறித்த வானிலை ஆய்வாளர்கள்!

சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் டிசம்பர் 23ம் தேதி முதல் கன‌மழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

2 Min read
Rayar r
Published : Dec 20 2024, 11:23 AM IST| Updated : Dec 20 2024, 11:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Chennai Rain

Chennai Rain

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.தொடர் மழை காரணமாக நெல்லை நகரம் வெள்ளத்தில் மிதந்தது. 

தென்காசி மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் கொட்டிய கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டமும் வெள்ள பாதிப்பால் சிக்கித் தவித்தது. மேலும் கடலுர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழையும் மற்ற இடங்களில் பரவாலாக மழையும் பெய்தது.

24
Rain In Tamilnadu

Rain In Tamilnadu

கிட்டதட்ட மூன்று,நான்கு நாட்களாக வெளுத்துக்கட்டிய கனமழை இப்போது கொஞ்சம் ஓய்வெடுத்துள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை 23ம் தேதி முதல் மீண்டும் தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்ற தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 23ம் தேதி டெல்டா பகுதிகள் வழியாக உள்ளே நுழைந்து அரபிக்கடலை சென்றடைய உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வரும் 23ம் தேதி முதல் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதாவது சென்னையிலும், டெல்டா மாவட்டத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும். காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலில் நுழைந்து வலு இழக்கும் வரும் வரை மேற்கண்ட இடங்களில் மழை பெய்யும் என்பதே வானிலை ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

இனி ரேஷனில் பொருள் வாங்க ஸ்மார்ட் கார்டு தேவையில்லை; இந்த ஒரு APP போதும்; முழு விவரம்!

34
Heavy Rain in Tamilnadu

Heavy Rain in Tamilnadu

இது மட்டுமின்றி 26ம் தேதி மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாகவும், இதன் காரணமாக 28ம் தேதி முதல் 31ம் வரை என 3 நாட்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதலே ஓரளவு பரவாலாக மழை பெய்து வருகிறது.
 

44
Heavy Rain

Heavy Rain

அதாவது கோடம்பாக்கம், வள்ளூவர் கோட்டம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள இடங்களிலும் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 99.2% மொபைல் போன்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன; மத்திய அமைச்சர் தகவல்!

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
சென்னை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved